தமிழகம்

ஆன்​லைன் செயலி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்க திட்டமிட்டதால் மேலூர் வருகையை ரத்து செய்த அமைச்சர் விஸ்வநாதன்

செய்திப்பிரிவு

மதுரை: மேலூரில் ஆன்​லைன் செயலி மூலம் முதலீடு செய்து பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் பெருங்​கூட்​ட​மாக திரண்டு மனுக்​கள் அளி்க்க திட்​ட​மிட்​ட​தால், அமைச்​சர் பெ.​விஸ்​வ​நாதனின் மேலூர் வருகை திடீரென ரத்து செய்​யப்​பட்​டது. மேலும், பொது​மக்களின் போராட்​டத்தை தவிர்க்க நகர் முழு​வதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை, தேனி, திண்​டுக்கல், விருதுநகர் மாவட்​டங்​களில் ஆன்​லைன் (எஃப்க்​யூஎல், விஜி) செயலி மற்​றும் கிரிப்டோ கரன்ஸி வர்த்​தகம் என்ற பெயரில் கோடிக்​கணக்​கில் முதலீடு​களை வசூலித்து மோசடி நடந்​துள்​ளது. பாதிக்​கப்​பட்ட ஆயிரக்​கணக்​கானோர் காவல் நிலை​யங்​களில் புகார்​ அளித்து வரு​கின்​றனர்.

இதில் குறிப்​பாக, மேலூர் மற்​றும் சுற்​று​வட்​டாரக் கிராமங்​களில் மட்​டும் அதி​க​மானோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், மேலூர் சட்​டப்​பேரவை உறுப்​பினரும், அமைச்​சரு​மான பெ.​விஸ்​வ​நாதன் தனது தொகு​தி​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க இருப்​ப​தாக நேற்று முன்​தினம் தகவல் வெளி​யானது. அப்​போது, பாதிக்​கப்​பட்​டோர் அவரிடம் முறை​யி​ட திட்டமிட்டிருப்​ப​தாக​ தகவல் பரவியது. இதனால் தவிர்க்க முடி​யாத பணி காரண​மாக அமைச்​சரின் மேலூர் வருகை திடீரென ரத்தான​தாக அறிவிக்​கப்​பட்​டது.

இருப்​பினும், பாதிக்​கப்​பட்​டோர் திரண்டு போராட்​டம் நடத்​தக்​கூடும் என்பதால் எம்எல்ஏ அலு​வல​கம் உள்​ளிட்ட முக்​கிய இடங்​களில் போலீ​ஸார் குவிக்கப்பட்​டனர்.

இதனிடையே, பாதிக்​கப்​பட்ட மக்​களின் பணத்தை மீட்பது குறித்​தும், எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்​தும் ஆட்​சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா, எஸ்பி தேவ​நாதன் ஆகியோ​ருடன், மதுரை​யில் நேற்று அமைச்​சர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

SCROLL FOR NEXT