சென்னையில் மத்திய அமைச்சர் ஜே பி நட்டா தமிழக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உடன் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை. படம்: ம.பிரபு

 
தமிழகம்

மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி; ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: தேர்தல் அறிக்கையில் பாஜக உறுதி

செய்திப்பிரிவு

மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் என்று தேர்​தல் அறிக்​கை​யில் பாஜக தெரி​வித்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள பாஜக​வின் தேர்​தல் அறிக்​கையை பாஜக முன்​னாள் தேசி​யத் தலை​வ​ரும் மத்​திய அமைச்​சரு​மான மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி. நட்டா வெளி​யிட்​டார். மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல்​,​பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தேர்​தல் அறிக்கை குழுத் தலை​வர் தமி​ழிசை சவுந்​தர​ராஜன், முன்​னாள் மாநிலத் தலை​வர் கே. அண்​ணா​மலை, மற்​றும் முக்​கிய நிர்​வாகி​கள் முன்​னிலை வகித்​தனர்.

          

குடும்​பத் தலைவி​கள் அனை​வ​ருக்​கும் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும். அத்​துடன் ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ஒரு​முறை நிதி​யுத​வி​யாக ரூ.10 ஆயிரம் வழங்​கப்​படும். ஆண்​டுக்கு 3 விலை​யில்லா எரி​வாயு சிலிண்​டர்​கள் வழங்​கப்​படும். பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்க ‘ஜீரோ எப்​ஐஆர்’ முறை அமல்​படுத்​தப்​படும். முதல் தலை​முறை பட்​ட​தா​ரி​களுக்கு ரூ.10 லட்​சம் வரை வட்​டி​யில்லா கடன் வழங்​கப்​படும்.

வேலை​வாய்ப்​பின்மை காரண​மாக கல்விக் கடன் கட்ட முடி​யாதவர்​களுக்கு கடன் தள்​ளு​படி செய்​யப்​படும். முரு​கப் பெரு​மானின் புகழைப் போற்​றும் வகை​யில் ‘தைப்​பூசம்’ மாநில விழா​வாகக் கொண்​டாடப்​படும். திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் கார்த்​திகை தீபம் ஏற்​றும் பாரம்​பரி​யம் மீண்​டும் நிலை​நாட்​டப்​பட்​டு, அது தொடர்ந்து பாது​காக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் தேர்​தல் அறிக்​கை​யில் இடம் பெற்​றுள்​ளன.

திமுக ஒரு குடும்ப நிறு​வனம்: நிகழ்ச்​சி​யில் ஜே.பி.நட்டா பேசுகை​யில், “கலாச்​சா​ரத்​தின் தொட்​டிலாகத் திகழும் தமி​ழ​கத்​தை, திமுக​வும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் இன்று ‘குற்​றங்​களின் தலைநக​ராக’ மாற்​றி​விட்​டன. தமி​ழ​கம் ஒரு​போதும் தோல்​வியடைந்​தது இல்​லை.

ஆனால் திமுக அரசு தமி​ழ​கத்​தைத் தோல்​வியடையச் செய்​துள்​ளது. ஒட்​டுமொத்த மாநில​மும் வாரிசு அரசி​யலுக்​கும் ஊழலுக்​கும் எதி​ராகக் கொதித்​துக் கொண்​டிருக்​கிறது. திமுக என்​பது ஒரு அரசி​யல் கட்​சியே அல்ல, அது ஒரு குடும்ப நிறு​வனம். ஸ்டா​லின் தலை​மை​யில், உதயநிதி வாரி​சாக, கனி​மொழி கூட்​டாளி​யாக, சபரீசன் மேலா​ள​ராக என ஒரு குடும்​பமே கட்​சியை ஆக்​கிரமித்​துள்​ளது.

கடந்த 5 ஆண்​டு​களில் தமி​ழ​கத்​தில் 8 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கொலை​கள் நடந்​துள்​ளன. பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் 56 சதவீதம் அதி​கரித்​துள்​ளன. போதைப்​பொருள் புழக்​கத்​தில் தமி​ழ​கம் முதலிடத்​தில் உள்​ளது.. முந்​தைய தேர்​தல் வாக்​குறு​தி​களில் 70 சதவீதத்​தைக்​கூட திமுக நிறை​வேற்​ற​வில்​லை. சனாதன தர்​மத்தை இழி​வுபடுத்​து​வ​தி​லும், இந்​துக்​களை அவம​திப்​ப​தி​லுமே திமுக அரசு குறி​யாக உள்​ளது,” என தெரி​வித்​தார்.

அண்​ணா​மலை செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “1950, 60 -களின் திமுகவைப் பார்க்க வேண்​டி​யிருக்​கும் என்​றும், நாட்​டின் பிரதமருக்கு கடைசி எச்​சரிக்கை என்​றும் முதல்​வர் பேசுவது, அவர் வகிக்​கும் அரசி​யல் சாசனப் பதவிக்கு அழகல்ல. தொகுதி மறு​வரையறை தொடர்​பாக முதல்​வர் திட்​ட​மிட்​டுப் பொய் பரப்​பு​கி​றார்.

தமி​ழ​கத்​தில் எம்​.பி.க்​கள் எண்​ணிக்கை குறை​யாது. எம்​.பி.க்​களின் மொத்த இடங்​களின் எண்​ணிக்​கையை உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. தற்​போதுள்ள 543 இடங்​களை 816-ஆக உயர்த்​தும் பட்​சத்​தில், எம்​.பி.க்​கள் எண்​ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயரவே வாய்ப்​புள்​ளது” என்​றார்.

SCROLL FOR NEXT