திருச்செந்தூர் கோயில்

 
தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் அபிஷேக சிறப்பு தரிசனம் உள்ளிட்ட கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு

ஜூலை 7 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அறிவிப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கட்டண சேவை​கள் மற்​றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்​ட​ணத்தை உயர்த்த, கோயில் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இதுகுறித்​து, ஜூலை 7 வரை ஆட்​சேபனை​களை தெரிவிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​களும், விடு​முறை நாட்​களில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​களும், விழாக்​காலங்​களில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​களும் வந்து செல்​கின்​றனர். இந்​நிலை​யில், தரிசன மற்​றும் அபிஷேக கட்​ட​ணத்தை உயர்த்​தி, கோயில் நிர்​வாகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறி​விப்பு வரு​மாறு: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில், தற்​போதுள்ள கட்டண சேவை​கள் மற்​றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்​ட​ணத்தை உயர்ந்த உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, தங்​கத்​தேர் இழுக்க தற்​போதைய கட்​ட​ணம் ரூ.2,500 என்​பதை ரூ.5 ஆயிர​மாக​வும், நிரந்தர வைப்பு நிதி ரூ.50 ஆயிரம் என்​பதை ரூ.1 லட்​ச​மாக​வும், சண்​மு​கார்ச்​சனைக்கு ரூ.5 ஆயிரம் என்​பதை ரூ.30 ஆயிர​மாக​வும், நிரந்தர வைப்பு நிதி கட்​ட​ணம் ரூ.72 ஆயிரம் என்​பதை ரூ.4.32 லட்​ச​மாக​வும், மூல​வர் அபிஷேகத்​துக்கு ரூ.1,500 என்​பதை ரூ.10 ஆயிர​மாக​வும், ஒன்​பது கால பூஜைக்கு ரூ.1,500 என்​பதை ரூ.6,500 ஆகவும், நிரந்தர வைப்பு நிதி கட்​ட​ணம் ரூ.20 ஆயிரம் என்​பதை ரூ.90 ஆயிர​மாக​வும் உயர்த்த உத்​தேசிக்​கப்​பட்​டுள்ளது.

மேலும், சந்​தனக்​காப்​புக்கு தற்​போதைய கட்​ட​ணம் ரூ.100 என்​பதை ரூ.1,000 ஆகவும், அபிஷேக சிறப்பு தரிசன கட்​ட​ணம் சாதாரண நாட்​களில் ரூ.500 என்​பதை ரூ.2,500 ஆகவும், திரு​விழா மற்​றம் விசேஷ நாட்​களில் ரூ.2 ஆயிரம் என்​பதை ரூ.2,500 ஆகவும் உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கட்டண உயர்வு குறித்து ஆட்​சேபனை​கள் இருந்​தால், எழுத்து மூல​மாக ஜூலை 7-ம் தேதி மாலை 5.45 மணிக்​குள், கோயில் இணை ஆணை​யரிடம் வழங்​கலாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பக்​தர்​கள் அதிர்ச்சி: பக்​தர்​கள் மத்​தி​யில் இந்த கட்டண உயர்வு கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவர்​கள் கூறுகை​யில், ‘திருச்​செந்​தூர் கோயிலுக்கு பக்​தர்​கள் அளிக்​கும் உண்​டியல் காணிக்​கை, மாதந்​தோறும் கோடிக்​கணக்​கில் வரு​கிறது. எனவே, கட்​ட​ணத்தை உயர்த்​தும் முடிவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். கடவுள் முன்பு அனை​வரும் சமம். ஏழை, பணக்காரன் என்ற பாகு​பாடு கூடாது. இதனை நீதி​மன்​றங்​கள் பலமுறை சுட்​டிக்​காட்​டி​யுள்​ளன. கட்டண உயர்​வால் சாதாரண பக்​தர்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள்.

கட்டண உயர்வை ஏற்​றுக் கொள்ள முடி​யாது என்​றனர். மேலும், ஏற்​கெனவே அதிக பணம் கொடுத்​து​தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்​டிய நிலை இருக்​கிறது. கட்​ட​ணத்தை பல மடங்கு உயர்த்​தி​னால் சாமானிய மக்​கள் சுவாமி கும்​பிடமுடி​யாத நிலை ஏற்​படும். கட்டண உயர்வை கைவிட வேண்​டும். வசூல் நோக்​கத்​தில் இது​போன்ற முடிவை எடுப்​பது ஏற்​புடையதல்ல.

அனைத்துக் கோயில்​களி​லும் பக்​தர்​கள் இறைவனை எளி​தில் தரிசிக்க தகுந்த ஏற்​பாடு​களை செய்​திட வேண்​டும். கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்கு தேவை​யான அடிப்​படை வசதி​களை செய்து கொடுக்க வேண்​டும் என கருத்து தெவித்​தனர்.

SCROLL FOR NEXT