தமிழகம்

திருவனந்தபுரம் - தாம்பரம் ‘அம்ரித் பாரத்’ ரயில் சேவை: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

என்.சன்னாசி

மதுரை: தொலை​தூரப் பயணத்​தைச் சுக​மாக்​கும் வசதி​களு​டன் திரு​வனந்​த​புரம்​-​தாம்​பரம் இடையே இன்று முதல் ‘அம்​ரித் பாரத்’ புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்​கிறார்.

மதுரை வழி​யாக திரு​வனந்​த​புரம் - தாம்​பரம் ‘அம்​ரித் பாரத்’ என்ற வாராந்​திர புதிய எக்​ஸ்​பிரஸ் ரயில் சேவை இன்று (ஜன. 23) தொடங்​கு​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி இதை தொடங்கி வைக்​கிறார்.

          

22 ரயில் பெட்டிகள்: மொத்​தம் 22 பெட்​டிகள் கொண்ட இந்த ரயி​லில் ‘வந்தே பாரத்’ ரயில்​போல இரு​புற​மும் ரயில் பெட்​டிகளு​டன் இணைந்த இன்​ஜின்​கள் உள்​ளன. மணிக்கு 130 கிலோ மீட்​டர் வேகத்​தில் பயணிக்​கத் தகுதி உடைய இந்த ரயி​லில் எவ்​வித குலுங்​கல் இன்றி பயணத்தை இனிமை​யாக்​கும் வகை​யில் வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

நவீன சொகுசு வசதி கொண்ட இருக்​கை, படுக்கை அமைப்​பு​கள், குடிநீர் பாட்​டில், மொபைல் போன்​றவற்றை பாது​காப்​பாக வைக்​கும் வசதி,

மடித்து வைக்​கும் சிறிய உணவு மேஜை, ஒளி விளக்​கு​கள், பொது அறி​விப்​பு, இரவு நேரத்​தில் எளி​தாக நடக்​கும் வகை​யில் ரேடி​யம் ஒளிரும் தரை விரிப்​பு​கள், இரவில் அவசரத் தேவைக்கு பெட்​டிக்கு வெளியே ஒளிரும் விளக்​கு​கள் உள்​ளிட்ட முக்​கிய சிறப்பு அம்​சங்​களும் இந்த ரயி​லில் இடம்​பெற்​றுள்​ளன.

குளித்​துறை, நாகர்​கோ​வில், வள்​ளியூர், நெல்​லை, கோவில்​பட்​டி, சாத்​தூர், விருதுநகர், மதுரை, திண்​டுக்​கல், திருச்​சி,ஸ்ரீரங்​கம், அரியலூர், விருத்​தாச்​சலம், விழுப்​புரம், செங்​கல்​பட்​டில் இந்த ரயில் நின்று செல்​லும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறியதாவது: திரு​வனந்​த​புரம்​-​தாம்​பரம் அம்​ரித் பாரத் ரயி​லின் அறி​முகம், கேரளா- தமிழ்​நாடு இடையி​லான ரயில் இணைப்பை வலுப்​படுத்​தும். கேரளா​வின் தலைநகரை தமிழ்​நாட்​டின் முக்​கிய புறநகர் மற்​றும் போக்​கு​வரத்து மையங்​களில் ஒன்​றான தாம்​பரத்​துடன் இணைப்​ப​தால், 2 மாநிலங்​களுக்​கும் இடையே தொடர்ந்து பயணிக்​கும் பயணி​களுக்கு நம்​பக​மான வழித்​தட​மாக இருக்​கும்.

பயண நேரத்தை குறைக்கும்: காஞ்​சிபுரம். விழுப்​புரம், கடலூர், திருச்​சி, திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர், தூத்​துக்​குடி, நெல்​லை, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​கள் வழி​யாகச் சென்று திரு​வனந்​த​புரத்தை இணைக்​கும் இச்​சேவை​யால் முக்​கிய தொழில், கல்​வி, கலாச்​சார, புனிதத் தலங்​கள் ஒன்​றிணைக்​கப்​படு​கின்​றன.

இந்த சேவை மிக​வும் அவசி​ய​மான மற்​றும் சரி​யான நேரத்​தில் தொடங்​கப்​படு​கிறது. நவீன வசதி​களு​டன் கூடிய இந்த ரயில் நெடுந்​தூரப் பயணத்​துக்கு வசதி​யாக இருக்​கும். தாம்​பரம்​-​திரு​வனந்​த​புரம் இடையி​லான பயண நேரத்​தைக்​ குறைக்​கும்​. இவ்​வாறு தெற்கு ரயில்வே அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT