திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்

 
தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கோயில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் வழக்​கில் இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலு​வை​யில் உள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் திருக்​கார்த்​திகை நாளான கடந்​தாண்டு டிச.3-ல் தீபம் ஏற்​றக்​கோரி மதுரை எழு​மலையை சேர்ந்த ராம ரவி​கு​மார் உள்பட பலர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்​தனர். இதை விசா​ரித்த தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என டிச.1-ம் தேதி உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் பிர​தான மனு மீதான தனி நீதிப​தி​யின் தீர்ப்​புக்கு எதி​ராக அரசு தரப்​பிலும், நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக அதி​காரி​கள் தரப்​பிலும் மேல்​முறை​யீடு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுவை விசா​ரித்த முந்​தைய அமர்​வு, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து ஒவ்​வொரு ஆண்​டும் திருக்​கார்த்​திகை நாளில் தீபத்​தூணிலும் கோயில் நிர்​வாகம் சார்​பில் தீபம் ஏற்ற வேண்​டும் என கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்​தர​விட்​டது. நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கையை அதி​காரி​கள் சந்​திக்​க​வும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, அதி​காரி​கள் மீதான நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்த மனுக்​கள் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது நீதிப​தி​கள், தனி நீதிப​தி​யின் உத்​தரவை இரு நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​துள்​ளது.

இந்த உத்​தர​வால் யாருக்​கும் எந்த பாதிப்​பும் இல்​லை. உத்​தரவை செயல்​படுத்​து​வ​தில் அரசுக்கு என்ன சிரமம் உள்​ளது. இந்த விவ​காரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​காமல், ஏன் இன்​னும் நீட்​டிக்க விரும்​பு​கிறீர்​கள், அனைத்து தரப்​பும் சமரச​மாகப் பேசி திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கலாம். திருப்​பரங்​குன்​றத்​தில் வசிக்​கும் மக்​களின் நலனை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டும்.

அவர்​கள் அங்​கு​தான் வசிக்​கின்​றனர். அவர்​களுக்​குத்​தான் கள நில​வரம் தெரி​யும். மதநல்​லிணக்​கம் முக்​கி​யம். இதனால் இருதரப்​பினரை​யும் ஒன்​றாக அமர்ந்து சமரசம் பேசி ஒரு தீர்வை எட்​டச் செய்​யுங்​கள். இதை ஏன் இருதரப்பு வழக்​கறிஞர்​களும் பரிசீலிக்​கக் கூடாது எனக் கேட்டனர். தமிழக அரசு தரப்​பில், உயர் நீதி​மன்ற தீர்ப்பை அமல்​படுத்​தக்கூடாது என்​பது நோக்​கம் அல்ல. நூறு ஆண்​டு​களுக்கு மேலாக நடை​முறை​யில் இருக்​கும் முறையை தொடர்​வ​தா புதிய முறையை தொடர்​வ​தா என முடி​வெடுக்க வேண்​டி​யுள்​ளது.

தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​றும், பிர​தான மனு​தா​ரர் தரப்​பில், இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் பக்​தர்​களின் உரிமை​களை பாதிக்​கும் வகை​யில் இருக்​கும் சில பகு​தி​களை நீக்​கக்​கோரியும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்து நிலு​வை​யில் இருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து விசா​ரணையை ஜூலை 27-க்கு தள்ளி வைத்​தும், நீதி​மன்ற அவம​திப்பு நவடிக்​கைக்​கான தடையை நீட்​டித்​தும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

SCROLL FOR NEXT