தமிழகம்

போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படை அவசியம்: அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​போதைப்பொருள் புழக்​கத்தை கட்​டுப்​படுத்த போதைப்​பொருள் ஒழிப்பு அதிரடிப் படையை உரு​வாக்க வேண்​டும் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் தமிழக முதல்​வர் விஜய்யை விசிக தலை​வர் திரு​மாவளவன் சந்​தித்து பேசி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: விசிக சார்​பில் நடை​பெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்​டுக்கு முதல்​வர் வாழ்த்​துச் செய்தி அனுப்​பி​யிருந்​தார்.

அதற்கு நன்றி தெரிவிக்​கும் வகை​யிலும் ஆட்சி அமைத்து 100 நாட்​கள் வெற்​றிகர​மாக கடந்​திருப்​ப​தற்கு வாழ்த்து தெரி​வித்​து, இந்த ஆட்சி ஐந்​தாண்டு கால​மும் தொடர்​வதற்கு எங்​கள் ஆதரவு உண்டு என்​பதை உறு​திப்​படுத்​து​வதற்​கும், முதல்​வரை சந்​தித்து பேசினோம்.

தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு அனைத்து நிகழ்ச்​சிகளி​லும் முதலிடம் அளிப்​பதை உறு​திப்படுத்​தும் தீர்​மானம், மக்​களவை தொகுதி வரையறைக்கு எதி​ரான தீர்​மானம் ஆகியவற்றுக்கு பாராட்​டு​ தெரி​வித்​தோம்.

முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி காலத்​தில் மாநில சுயாட்சி கோரிக்கை வலு​வாக பேசப்​பட்​டது. நீங்​களும் அதே வழி​யில் மாநில சுயாட்​சிக்​கான குரலை ஓங்கி ஒலிக்க வலி​யுறுத்​தினோம்.

அமுதன் படு​கொலையின் பின்​னணி​யில் போதைப்​பொருள் புழக்​கம் இருப்​ப​தாக அமுதனின் பெற்​றோர் உள்​ளிட்ட பலரும் தொடர்ந்து வலி​யுறுத்தி வரும் நிலை​யில், அந்த வழக்கை சிறப்பு புல​னாய்​வுக்​குழு விசா​ரிக்க வேண்​டும்.

போதைப்​பொருள் புழக்​கத்தை கட்​டுப்​படுத்த போதைப்​பொருள் ஒழிப்பு அதிரடிப் படை ஒன்றை உரு​வாக்​கிட வேண்​டும், அதற்கு முதல்​வரின் கூடு​தல் கவனம் தேவை.

தவெக உடன் இணைந்து 100 நாட்​கள் தான் ஆகிறது. கூட்​டணி அரசில் அங்​கம் வகிப்​ப​தன் மூலம் நாங்​களும் ஒரு ஆளும் கட்சி என்ற அடை​யாளத்தை பெற்​றுள்​ளோம். இந்த வளர்ச்​சியை தமிழக மக்​கள் வழங்​கி​உள்​ளனர். அவர்​கள் விருப்​பப்​படி எங்​கள் அரசி​யல் நிலைப்​பாடு இருக்​கும் என்றார்.

SCROLL FOR NEXT