தமிழகம்

‘ஓபன் ஹவுஸ்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்​தில் உள்ள ஆராய்ச்சி மையங்​களை​யும், ஆய்​வகங்​களை​யும் பொது​மக்​கள் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதி​களில் பார்​வை​யிடலாம். இதற்கு டிச.5-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் முன்​ப​திவு செய்ய வேண்​டும் என, அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

‘ஓபன் ஹவுஸ்’ என்ற சிறப்பு திட்​டத்​தின் கீழ், ஒவ்​வோர் ஆண்​டும் ஐஐடி வளாகத்தை பொது​மக்​கள் பார்​வை​யிட அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதன் மூலம், ஐஐடி​யில் நடை​பெறும் பல்​வேறு ஆராய்ச்சி பணி​களை​யும், அங்​குள்ள தொழில்​நுட்ப ஆய்​வகங்​களை​யும் மாணவர்​கள், ஆசிரியர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள், பொது​மக்​கள் என, அனைத்து தரப்​பினரும் சென்று பார்​வை​யிடலாம்.

கடந்த ஆண்டு இந்​நிகழ்ச்சி வாயி​லாக சென்னை மட்​டுமின்​றி, இதர நகரங்​களில் இருந்​தும் ஏராள​மான பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள், பொது​மக்​கள் வருகை தந்து ஐஐடி வளாகத்தை பார்​வை​யிட்​டனர்.

இந்​நிலை​யில், ‘ஓபன் ஹவுஸ்’ என்ற திட்​டத்​தின் கீழ் வரும் ஜனவரி 2, 3 மற்​றும் 4-ம் தேதி ஆகிய 3 நாட்​கள் ஐஐடி வளாகத்தை பொது​மக்​கள் பார்​வை​யிடலாம் என ஐஐடி நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது. ஐஐடி​யில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்​கள், 11 ஆராய்ச்சி நிறு​வனங்​கள் ஆகிய​வற்​றோடு ஆராய்ச்சி திட்​டப் பணி​களை எடுத்​துரைக்​கும் 80-க்​கும் மேற்​பட்ட தொழில்​நுட்ப அரங்​கு​களை​யும் பொது​மக்​கள் பார்க்​கலாம்.

மேலும், 18 கல்​வித் துறை​களை​யும், மாணவர்​களின் தொழில்​நுட்ப ஆராய்ச்​சிகளை​யும் பார்​வை​யிடலாம். புதிய கண்​டு​பிடிப்​பு​கள் தொடர்​பான நேரடி செயல் விளக்​கத்​தை​யும் காணலாம். எனவே, ஐஐடியை பார்​வை​யிட விரும்​பும் பொது​மக்​கள் டிச. 5-ம் தேதிக்​குள் shaastra.org/open-house. என்ற இணை​யதள இணைப்​பில் தங்​கள் பெயரை முன்​ப​திவு செய்து கொள்ள வேண்​டும் என ஐஐடி நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி கூறும் போது, “அனை​வருக்​கும் ஐஐடி என்ற உன்னத இலக்​குடன் இந்த சிறப்பு நிகழ்ச்சி ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. ஒவ்​வொரு ஆண்​டும் லட்​சக்​கணக்​கான மாணவர்​கள், ஆசிரியர்​கள் பார்​வை​யிடு​கின்​றனர்.

நல்ல வரவேற்பு: இதன் மூலம், ஐஐடி​யில் சேர வேண்​டும், ஆராய்ச்​சிப் பணி​களில் ஈடுபட வேண்​டும் என்ற உந்​துதல் மாணவர்​களுக்கு ஏற்​படும். இந்​நிகழ்ச்​சிக்​கு, பொது​மக்​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு இருந்து வரு​கிறது. வழக்​கம்​போல் இந்த ஆண்​டும் அதிக எ்ண்​ணிக்​கையி​லான மாணவர்​கள் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கிறோம். அவ்​வாறு வருகை தரும் மாணவர்​கள் வரும் காலங்​களில் எங்​கள் மாணவ​ராக வேண்​டும்​ என்​பது​தான்​ எங்​கள்​ ஆசை” என்றார்.

SCROLL FOR NEXT