புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரர்கள்.

 
தமிழகம்

நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் காளைகள் முட்டியதில் 51 பேர் காயம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: தமிழகத்​தில் நடப்​பாண்​டுக்​கான முதல் ஜல்​லிக்​கட்டு புதுக்​கோட்டை மாவட்​டம் கந்​தர்​வக்​கோட்டை அரு​கே​யுள்ள தச்​சங்​குறிச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் காளை​கள் முட்​டிய​தில் 51 பேர் காயமடைந்​தனர்.

ஜல்​லிக்​கட்டு நிகழ்ச்​சிக்கு மாவட்ட ஆட்​சி​யர் எம்​.அருணா தலைமை வகித்​தார். அமைச்​சர்​கள் எஸ்​.ரகுப​தி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஜல்​லிக்​கட்டை தொடங்கி வைத்​தனர். இதில், புதுக்​கோட்டை உட்பட பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து அழைத்து வரப்​பட்ட 497 காளை​கள் அவிழ்த்​து​விடப்​பட்​டன. காளை​களை அடக்க 200 வீரர்​கள் களமிறங்​கினர்.

ஜல்​லிக்​கட்​டிப் போட்​டி​யில் காளை​கள் முட்​டிய​தில் காளை உரிமை​யாளர்​கள் 20 பேர், வீரர்​கள் 15 பேர், பார்​வை​யாளர்​கள் 16 பேர் என மொத்​தம் 51 பேர் காயமடைந்​தனர். இவர்​களில் 10 பேர் புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் சேர்க்​கப்​பட்​டனர்.

பிடிப​டாத காளை​களின் உரிமையாளர்​கள் மற்​றும் காளை​களை அடக்​கிய வீரர்​களுக்​குப் பல்​வேறு பரிசுகள் வழங்​கப்​பட்​டன. கந்​தர்​வக்​கோட்​டை போலீ​ஸார்​ ​பாது​காப்​புப்​ பணி​யில்​ ஈடு​பட்​டனர்​.

SCROLL FOR NEXT