எஸ்.பி.வேலுமணி | கோப்புப்படம் 
தமிழகம்

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: அ​தி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி மீதான டெண்​டர் முறை​கேடு வழக்​கில் தொடர்​புடைய ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ரான விசா​ரணைக்கு அனு​மதி பெறு​வதை வேண்​டுமென்றே தாம​திக்​க​வில்லை என்​று, தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

சென்னை மற்​றும் கோவை மாநக​ராட்​சிகளில் நடை​பெற்ற ரூ.98 கோடி டெண்​டர் முறை​கேடு​களில் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி​யுடன் சேர்த்து இருமாநக​ராட்​சிகளி​லும் அதி​காரி​களாகப் பணி​யாற்​றிய, ஐஏஎஸ் அதி​காரி​களான கந்​த​சாமி, விஜய​கார்த்​தி​கேயன் ஆகியோர் மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ளது.

இவர்​கள் இரு​வருக்​கும் எதி​ரான குற்ற வழக்​கின் விசா​ரணைக்கு மத்​திய அரசின் அனு​மதி பெறு​வ​தில் ஏற்​பட்ட கால​தாமதம் குறித்து அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு, தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தமிழக அரசி்ன் பொதுத்​துறைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்​கூர், லஞ்ச ஒழிப்​புத்துறை ஆணை​யர் மணி​வாசன், லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குநர் அபய்​கு​மார் சிங் ஆகியோர் தாக்​கல் செய்த அறிக்​கை​யில், “ஐஏஎஸ் அதி​காரி​கள் இரு​வருக்​கும் எதி​ரான விசா​ரணைக்கு மத்​திய அரசிட​மிருந்துஅனு​மதி பெறு​வதை வேண்​டுமென்றே தாம​திக்​க​வில்​லை.

சுமார் ஒரு லட்​சத்து 30 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட ஆவணங்​களை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்​பட்​டது” என்று விளக்​கம் அளிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்​து, வழக்கு விசா​ரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT