தமிழகம்

சிறுமி, சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் பூசாரிக்கு 178 ஆண்டு​ சிறை தண்டனை

சிவகங்கை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒரு சிறுமி, 2 சிறு​வர்​களை மிரட்டி காயப்​படுத்தி பாலியல் வன்​கொடுமை செய்த கோயில் பூசா​ரிக்கு 178 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதித்து சிவகங்கை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

சிவகங்கை அருகே சோழபுரத்​தைச் சேர்ந்த கோயில் பூசாரி பெரிய​சாமி (70). இவர் கடந்த 2024-ம் ஆண்டு கோயிலுக்கு வந்த 2 சிறு​வர்​கள் மற்​றும் ஒரு சிறுமியை மிரட்​டி, காயப்​படுத்தி பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

          

இதுகுறித்து குழந்​தைகள் நலக்​குழு​வினர் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து பெரிய​சாமியை கைது செய்​தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதி​மன்​றத்​தில் நடந்​தது.

வழக்கை விசா​ரித்த நீதிபதி கோகுல்​முரு​கன் குற்​றம் சாட்​டப்​பட்ட பெரிய​சாமி 3 குழந்​தைகளை மிரட்​டியது, காயம் ஏற்​படுத்​தி​யது, பாலியல் வன்​கொடுமை செய்​தது, பூசா​ரி​யாக இருந்து கொண்டு பாலியல் குற்​றம் புரிந்​தது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்​கப்​பட்​டன.

இந்த வழக்​கில் 2 பேரை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்​காக தலா 30 ஆண்​டு​கள் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம்​, மேலும் ஒரு​வரை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்​காக 20 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், கோயி​லில் பூசா​ரி​யாக இருந்​து​கொண்டு 3 பேரை வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்​காக தலா 30 ஆண்​டு​கள் வீதம் 90 ஆண்​டு​களும், ரூ.3,000 அபராத​மும் மேலும் சில பிரிவு​களில் சிறைத் தண்​டனை என மொத்​தம் 178 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதித்​து நீதிபதி தீர்ப்​பளித்​தார்.

மேலும் ஒவ்​வொரு குற்​றத்​துக்​கும் கொடுக்​கப்​பட்ட தண்டனையை தனித்​தனி​யாக அனுபவிக்க உத்​தர​விட்​டார். இதனால் பெரிய​சாமி 178 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனையை மொத்​த​மாக அனுபவிக்க வேண்​டும். மேலும் பாதிக்​கப்​பட்ட சிறுமி, 2 சிறு​வர்​களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்​பீ​டாக வழங்க அரசுக்கு நீதிபதி உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT