தமிழகம்

சென்னையில் இருந்து 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து அபு​தாபிக்கு செல்​லும் எத்​தி​யாட் ஏர்​வேஸ் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்​படத் தயா​ரான போது விமானத்​தில் 228 பயணி​கள், 10 விமான ஊழியர்​கள் இருந்​தனர்.

விமானம் ஓடு​பாதை​யில் ஓடத் தொடங்​கிய​போது, விமானத்​தில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​டதை விமானி கண்​டு​பிடித்​து ஓடு​பாதையில் நிறுத்​தி கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார்.

விமானப் பொறி​யாளர்​கள் குழு​வினர், தீயணைப்​புப் படை​யினர் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்​த போது விமானத்​தில் ஹைட்​ராலிக் கோளாறு ஏற்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, விமானம் தாமத​மாகப் புறப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டது.

SCROLL FOR NEXT