தமிழகம்

ஒரே நேரத்தில் விடைத்தாள் மதிப்பீடு, தேர்தல் பணி: பணிச்சுமை என ஆசிரியர்கள் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: ஒரே நேரத்​தில் விடைத்​தாள் மதிப்​பீடு, தேர்​தல் பணி​களை மேற்​கொள்​வ​தில் பல்​வேறு சிரமங்​களை எதிர்​கொள்​வ​தாக ஆசிரியர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு ஏப்​.6-ம் தேதி முடிவடைந்​தது. மாணவர்​களின் விடைத்​தாள் மதிப்​பீட்டு பணி​கள் ஏப்​.9-ம் தேதி தொடங்​கியது. இந்த பணி​களில் அரசு, நிதி​யுதவி மற்​றும் தனி​யார் பள்​ளி​களின் ஆசிரியர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர்.

          

இதற்​கிடையே வாக்​குச்​சாவடி மையங்​களில் தேர்​தல் பணி​களில் ஈடு​படும் ஆசிரியர்களுக்கு ஏப்​.15-ம் தேதி பயிற்சி முகாம் நடை​பெறவுள்​ளது. இதில் ஆசிரியர்​கள் தவறாமல் பங்​கேற்க வேண்​டுமென தேர்​தல் ஆணையம் அறி​வுறுத்​தி​ உள்​ளது. இந்​நிலை​யில் விடைத்​தாள் மதிப்​பீடு, தேர்​தல் பணி​களை மேற்​கொள்​வ​தால் பல்​வேறு சிரமங்​கள் ஏற்​படு​வ​தாக ஆசிரியர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து ஆசிரி யர்​கள் சிலர் கூறிய​தாவது: சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதையொட்டி விடைத்​தாள் மதிப்​பீட்டை ஏப்​.20-க்​குள் முடிக்க திட்​ட​மிட்டு பணி​யாற்றி வரு​கிறோம். இந்​நிலை​யில் சில மாவட்​டங்​களில் தேர்​தல் சார்ந்த பணி​களில் ஈடு​படும் ஆசிரியர்​கள் விடைத்​தாள் திருத்​து​வ​தில் இருந்து விடுவிக்​கப்​பட்​டு, பூத் சிலிப் வழங்​குதல் உள்​ளிட்ட தேர்​தல் பணி​களை மேற்​கொள்ள அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதனால் அங்​குள்ள மையங்​களில் விடைத்​தாள் மதிப்​பீட்டு பணி​கள் பாதிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பிட்ட காலத்​துக்​குள் அவற்றை திருத்தி முடிக்க முடி​யாது என்​பதுடன், இதர ஆசிரியர்​களுக்​கும் பணிச்​சுமை ஏற்​படும். மேலும், இரு பணி​களி​லும் தொடர்ந்து ஈடு​படு​வ​தால் ஆசிரியர்​களிடம் தேவையற்ற குழப்​பத்தை உரு​வாக்​கி​யுள்​ளது. எனவே இதற்கு மாற்று ஏற்​பாடு​களை முன்​னெடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT