தமிழகம்

“விஜய்யின் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்” - தமிழிசை கருத்து

செய்திப்பிரிவு

​விஜய்​யின் திமுக எதிர்ப்பு நிலைப்​பாட்டை ஆதரிப்​ப​தாக பாஜக மூத்த தலை​வர் தமி​ழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார்.

சென்னை அமைந்​தகரை​யில் உள்ள தமிழக பாஜக தேர்​தல் அலு​வல​கத்​தில், 234 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் மக்​களிடம் இருந்து பெறப்​பட்ட ஆலோ​சனை​கள் மற்​றும் எதிர்​பார்ப்​பு​கள் அடங்​கிய தேர்​தல் அறிக்கை பெட்​டிகளை, பாஜக மாநில நிர்​வாகி​களிடம் தேர்​தல் அறிக்கை குழு தலை​வர் தமி​ழிசை சவுந்​தர​ராஜன் வழங்​கி​னார்.

          

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: வெறும் குளிர்​சாதன அறை​களில் அமர்ந்​து​கொண்​டு, எந்​தெந்த மாவட்​டங்​களுக்கு என்​னென்ன தேவை​கள் என்​பது கூடத் தெரி​யாமல், மேம்​போக்​காக ஒரு தேர்​தல் அறிக்​கை​யைத் தயா​ரிக்​கும் வழக்​கம் எங்​களு​டையதல்ல.

நேரடி​யாக மக்​கள் மன்​றத்​துக்கே சென்று அவர்​களின் குறை​களைக் கேட்​டறிந்து கோரிக்கை மனுக்​களைப் பெற்​றுள்​ளோம். இதற்​காக, மாவட்​டம் தோறும் ‘கோரிக்கை பெட்​டிகளை’ வைத்து மக்​களிட​மிருந்து கருத்​துக்​களைப் பெற்​றுள்​ளோம்.

தமிழக அரசி​யலில் ‘பெட்​டி’ என்​றாலே அதற்கு அர்த்​தமே வேறு. கூட்​ட​ணிக்கு முன்​பாகப் பெட்டி கைமாறுகிற​தா, அல்​லது கூட்​ட​ணிக்​குப் பின்​னால் கைமாறுகிறதா என்​பதே பலருக்​கும் தெரி​யாது. ஆனால், எங்​களிடம் அந்த ‘பெட்​டி’ கலாச்​சா​ரம் கிடை​யாது. நாங்​கள் தேர்​தல் அறிக்​கைக்கு முன்​பாக வெறும் பெட்​டியைக் கொடுத்​து, மக்​களின் நம்​பிக்​கையை நிரப்​பிக் கோரிக்கை பெட்​டி​யாகத் திரும்​பப் பெற்​றிருக்​கி​றோம்.

நாங்​கள் சற்​றும் எதிர்​பா​ராத அளவுக்​கு, பொது​மக்​கள் பெரு​மள​வில் ஆர்​வத்​துடன் தங்​கள் கோரிக்​கை​களை இந்​தப் பெட்​டிகளில் சமர்ப்​பித்​துள்​ளனர். பாஜக மற்​றும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் மீது மக்​கள் எந்த அளவுக்கு அசைக்க முடி​யாத நம்​பிக்கை வைத்​துள்​ளார்​கள் என்​ப​தற்கு இதுவே சாட்​சி. மக்​களின் இந்​தச் சிறப்​பான பங்​களிப்​பால், எங்​களது தேர்​தல் அறிக்கை மிகமிகப் புரட்​சிகர​மான​தாக​வும், தெளி​வான தொலைநோக்​குப் பார்வை கொண்​ட​தாக​வும் அமையப் போகிறது.

இந்​தக் கோரிக்​கைப் பெட்​டிகள் விரை​வில் வாக்​குப் பெட்​டிகளாக மாறி, தமிழக மக்​கள் எங்​களுக்கு மாபெரும் வாய்ப்​பினைத் தரு​வார்​கள் என்​பது உறு​தி. திமுக - காங்​கிரஸ் கூட்​டணி ஒப்​பந்​தம் கையெழுத்​தான பிறகு வெளியே வந்த முதல்​வர் ஸ்டா​லின் “எல்​லாம் முடிந்​து​விட்​டது” என ஒரு செய்​கை​யைக் காட்​டி​விட்​டுச் சென்​றார். உண்​மை​யில் அவரது அந்​தச் செய்​கை​யைப் பார்க்​கும்​போது, “தி​முக ஆட்​சியே முடிந்​து​விட்​டது” என்​ப​தைக் குறிப்​பது போலத்​தான் எனக்​குத் தோன்​றியது.

எங்​களை ‘அடிமைக் கூட்​ட​ணி’ என்று விமர்​சித்​தவர்​களைப் பார்த்து இன்று நான் பகிரங்​க​மாகக் கேட்​கிறேன். திமுக காங்​கிரஸுக்கு அடிமை​யா? அல்​லது காங்​கிரஸ் திமுக​வுக்கு அடிமை​யா? திமுக இது​வரை என்​னென்ன பொய்​களைச் சொல்லி மக்​களை ஏமாற்​றியதோ, அதனை நடிகர் விஜய், மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் மிகத் தெளி​வாக எடுத்து கூறி​யுள்​ளார். அந்த வகை​யில் அவரை நான் பாராட்​டு​கிறேன். விஜய்​யின் இந்​தத் திமுக எதிர்ப்பு நிலைப்​பாட்​டை​யும், கருத்​துகளை​யும் நான் வலிமை​யாக ஆதரிக்​கிறேன்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT