தமிழகம்

இலங்கை துயரில் இந்தியா பங்கெடுத்துள்ள நிலையில் அரசியல் லாபத்துக்காக சீமான் அறிக்கை: தமிழிசை விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘டிட்​வா’ புயலில் பாதிக்​கப்​பட்​டுள்ள இலங்​கைக்​கு, ‘ஆபரேஷன் சாகர் பந்​து’, அதாவது ‘ஆபரேஷன் கடல் நண்​பன்’ என்ற முயற்​சி​யின் மூலம் பிரதமர் மோடி​யின் வழி​காட்​டு​தலில் இந்​தியா உதவிக் கொண்​டிருக்​கிறது.

இந்​திய இதயங்​கள், இலங்கை துயரங்​களில் பங்​கெடுத்​துக் கொண்​டிருக்​கிறது என்​பதை பிரதமர் வலிமை​யாகவே நிரூபித்​துக் கொண்​டிருக்​கிறார்.

ஆனால், இலங்கை தமிழர்​களுக்கு உதவ வேண்​டும் என்று சீமான் போன்​றவர்​கள் அரசி​யல் லாபத்​துக்​காக இன்று அறிக்கை வெளி​யிட்​டுக் கொண்​டிருக்​கிறார்​கள்.

இத்​தகைய அறிக்​கைகளும், பொய் உரைகளும் மோடியின் மனி​தாபி​மானத்தை மறைக்க முடி​யாது.

SCROLL FOR NEXT