தமிழகம்

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பணி​யின் போது அரசு பேருந்து ஓட்டுநர்கள் கைப்​பேசியை பயன்​படுத்​தி​னால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என, போக்​கு​வரத்து துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்​து, போக்​கு​வரத்து துறை வெளி​யிட்ட சுற்​றறிக்​கை: பேருந்து இயக்​கத்​தின் போது ஓட்​டுநர்​கள் கைப்​பேசி (செல்​போன்) பயன்​படுத்​தக் கூடாது என ஏற்​க​னவே அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இருப்​பினும் ஓட்​டுநர்​கள் சட்​டப்​பை​யில் கைப்​பேசி வைத்​திருப்​ப​தாக​வும், அவ்​வப்​போது பணி​யின் போது பயன்​படுத்தி வரு​வ​தாக பயணி​களிடம் இருந்து புகார் வரு​கிறது.

இவ்​வாறு ஓட்​டுநர்​கள், பணி​யின் போது கைப்​பேசியை பயன்​படுத்தி வரு​வ​தால், அவ்​வப்​போது உயி​ரிழப்பு மற்​றும் பெரிய விபத்​துகளும் ஏற்​பட்டு வரு​கிறது.

எனவே,ஓட்​டுநர்​கள் பணி​யில் இருக்​கும் போது கைப்​பேசி, ப்ளூ-டூத் ஹெட்​-செட் போன்ற சாதனங்​களை கண்​டிப்​பாக எடுத்​துச் செல்​லக்​கூ​டாது.

பணி தொடங்​கு​வதற்கு முன்பு நடத்​துநரிடம் ஒப்​படைத்​து​விட்டு, பணி முடிந்த பின் அவர்களிடம் இருந்து திரும்ப பெற்​றுக் கொள்​ளலாம்.

மேலும், ஆய்​வின் போது ஓட்​டுநர்​கள் கைப்​பேசி பயன்​படுத்​து​வது கண்​டறியப்​பட்​டால் ஓட்​டுநர் மீது கடுமை​யான ஒழுங்கு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

இந்த உத்​தரவு முறை​யாக பின்​பற்​றப்​படு​கிறதா என பரிசோதகர்​கள், போக்​கு​வரத்து ஆய்​வாளர்​கள், மேலா​ளர்​கள் கள ஆய்​வின் போது உறுதி செய்ய வேண்​டும்.

SCROLL FOR NEXT