தமிழகம்

இனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓடவேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வெற்​றியை நெருங்​கும் நேரத்​தில் பதற்​றமோ, அசதியோ கூடாது. இனி​தான் நம் முழு பலத்​தை​யும் கொடுத்து ஓடவேண்​டும் என்று திமுக மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

வரைவு வாக்​காளர் பட்​டியல் சரி​பார்த்​தல் குறித்த திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம், காணொலி வாயி​லாக நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை அவசரக​தி​யில் ஆரம்​பித்​த​போதே இது பல்​வேறு முறை​கேடு​களுக்கு வழி​வகுக்​கும். தகு​தி​யான வாக்​காளர்​கள் நீக்​கப்பட வாய்ப்​புள்​ளது என்று எச்​சரித்​தோம்.

உச்ச நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு தொடுத்​தோம். அதன்​படியே, எஸ்​ஐஆர் மூலம் 15 சதவீதம் பேர், அதாவது 97 லட்​சம் வாக்​காளர்​களை நீக்​கி, வரைவுப் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்​ளது. இடம் பெயர்ந்​தவர்​கள் என்று மட்​டும் சுமார் 66 லட்​சம் பேரை நீக்​கி​யுள்​ளனர்.

குறிப்​பாக 168 தொகு​தி​களில் 10 சதவீதத்​துக்​கும் அதி​க​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதை நாம் வாக்​குச்​சாவடி வாரி​யாக சரி​பார்க்க வேண்​டும். உதா​ரண​மாக கும்​மிடிப்​பூண்​டி​யில் முதல் வாக்​குச்​சாவடி​யில் 40 வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். அதில் 4 பேர் ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்பு மூல​மாக சேர்ந்​தவர்​கள்.

அதில் ஒரு​வர் இறந்​து​ விட்​ட​தாக கூறி​யுள்​ளனர். அதே​போல், மற்ற 3 பேரை​யும் எதற்​காக நீக்​கினர் என்று சரி​பார்க்க வேண்​டும். நாம் களத்​தில் முழு​மை​யாக இறங்கி பணி செய்​கிறோம்.

மறு​புறம் அதி​முக​வும், பாஜக​வும் களத்​துக்கே வரவில்​லை. அதனால்​தான் நாம் சந்​தேகப்பட வேண்​டி​யுள்​ளது. எனவே, நீக்​கப்​பட்​ட​தில் நம் வாக்​காளர்​கள் இருக்​கிறார்​களா என கவன​மாக பார்க்க வேண்​டும்.

நான் வாக்​குச்​சாவடி வாரி​யாக உன்​னிப்​பாக கவனித்து வரு​கிறேன். ஒரே ஒருத்​தர் தவறு​தலாக விடு​பட்டு இருந்​தால்​கூட வாக்​காளர் பட்​டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இது அனைத்து மாவட்​டச் செய​லா​ளர்​கள், தொகுதி பார்​வை​யாளர்​களின் பொறுப்​பாகும்.

ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் நீக்​கப்​பட்​ட​வர்​கள் பட்​டியலும் அதில் யாரெல்​லாம் ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர்​கள் என்ற விவர​மும் இன்​றைக்​குள் (டிசம்​பர் 22) மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​படும். விவரங்​களை முழு​மை​யாக சரி​பார்த்து விடு​படல் இல்​லாத​வாறு பார்த்​துக்​கொள்ள வேண்​டும். மேலும், புதிய வாக்​காளர்​கள் சேர்க்​கப்​ படு​வதை​யும் கவனிக்க வேண்​டும். போலிகள் இல்லாமல் பார்த்​துக் கொள்ள வேண்​டும்.

இதுத​விர, வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 75,032 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. பூத் எண் மட்​டும் மாறிய வாக்​குச்​சாவடிகளுக்​கு, ஏற்​கெனவே நியமிக்​கப்​பட்​டுள்ள பிஎல்ஏ 2-க்​கள் தொடர வேண்​டும். புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளுக்கு புதிய பொறுப்​பாளர்​களை நியமிக்க வேண்​டும். நம்மை நேர்​வழி​யில் வீழ்த்த முடி​யாத எதிரி​கள் குறுக்கு வழி​யில் காரி​யம் சாதிக்க நினைப்​பார்​கள். அதற்கு கடு​களவு​கூட இடம் தரக்​கூ​டாது.

வெற்​றியை நெருங்​கும் நேரத்​தில் பதற்​றமோ, அசதியோ கூடாது. இனி​தான் நம் முழு பலத்​தை​யும் கொடுத்து ஓடவேண்​டும். களத்​தில் நாம்​தான் வலிமை​யாக உள்​ளோம். நம் கூட்​ட​ணி​தான் வெற்​றிக் கூட்​ட​ணி. வெற்​றியை எட்​டும் வரை கவனம் சிதறாமல் உழை​யுங்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT