திருவாரூர் அருகே நேற்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 
தமிழகம்

“இனிமேல் கூட்டணியே வேண்டாம் என்பதை பரிசீலிப்போம்” - திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

செய்திப்பிரிவு

திருவாரூர்: ​தி​முக​வில் இனி கூட்​ட​ணியே வேண்​டாம் என்​பது பற்றி பரிசீலிப்​போம் என அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

திரு​வாரூர் அருகே காட்​டூரில் உள்ள கலைஞர் கோட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர் மதி​வாணன் இல்​லத்திருமண விழா​வில் அவர் பேசி​ய​தாவது: தமிழகம் முழு​வதும் இன்று ஏராள​மான பிரச்​சினை​கள் உள்​ளன. ஒரு பக்​கம் மின்​வெட்டு பிரச்​சினை, மறு​பக்​கம் மேட்​டூர் அணை​யில் குறித்த நேரத்​தில் தண்​ணீர் திறக்க முடிய​வில்​லை. இவற்​றையெல்​லாம் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் சட்​டப்​பேர​வை​யில் பேசி​னால், அதற்கு உரிய பதிலை கூறாமல், முதல்​வ​ராக உள்​ளவர் எங்கே உங்​கள் அப்​பாவை காணோம் என்​கிறார். அப்​பாவை அங்கே தேடாதீர்​கள், மக்​கள் மனதில் பதிந்​திருக்​கிறார்.

சட்​டப் பேர​வை​யில் நான் இருந்​தா​லும், இல்​லா​விட்​டாலும் மக்​கள் மன்​றத்​தில் நான் இருக்​கிறேன். கடந்த 60 வருடங்​களாக மக்​களோடு மக்​களாகத்​தான் பணி​யாற்றி வரு​கிறேன். முதல்​வ​ராக நான் ஆய்வுக் கூட்​டம் நடத்​தி​யதைப்​போல யாரும் செய்​திருக்க மாட்​டார்​கள். கோட்​டை​யில்​தான் கோப்​புகள் உள்​ளன. அதை எடுத்​துப் பாருங்​கள். மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை, புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் போன்ற திட்​டங்​களில் எல்​லாம் நான் கையெழுத்​திட்​டுள்​ளேன். அங்​கெல்​லாம் நான் இருக்​கிறேன்.

எனவே, என்னை தேடிக் கொண்​டிருக்க வேண்​டிய​தில்​லை. மக்​களோடு​தான் இருக்​கிறேன். முதல்​வ​ராக இருந்த அண்​ணா, நமது மாநிலத்​துக்கு தமிழ்​நாடு என்று பெயர் வைத்​தது ஒன்றே போதும். இந்த தமிழ்​நாடு பெயர் உள்ளவரை நான் தான் முதல்​வர் என்று சொன்​னதைப் போல, மகளிர் உரிமை திட்​டம் இருக்​கும் வரை ஸ்டா​லின்தான் முதல்​வர்.

திமுக தலை​வ​ராக கருணாநிதி இருந்​த​போது, கூட்​டணி கட்​சிகள் அவர்​களாக போனால் போவார்​களே தவிர, யாரை​யும் வெளி​யேற்ற மாட்​டார். அந்த வழி​யில்​தான் நானும் கூட்​ட​ணியை பாது​காத்​தேன். ஆனால், திமுக​வில் இனி கூட்​ட​ணியே வேண்​டாம் என சொல்​லிக் கொண்​டிருக்​கிறார்​கள், அதை​யும் பரிசீலிப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

அதி​கப்​பிரசங்​கித்​தனம்: முன்​ன​தாக திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் ஆ.ராசா பேசும்​போது, “ஒரு கம்​யூனிஸ்ட் தலை​வர், திமுக கூட்ட​ணியே இல்லை என்​கிறார். அதைச் சொல்ல நீங்​கள் யார்? எங்​கள் கட்சி திமுக கூட்​ட​ணி​யில் இல்லை என்று வேண்​டு​மா​னால் சொல்​லுங்​கள். திமுக கூட்​ட​ணியே இல்லை என்று சொல்​வது அதி​கப்​பிரசங்​கித்​தனம். இதற்கு இந்த மேடை​யில் உள்ள முத்​தரசன் மன்​னிக்க வேண்​டும். இன்​னொரு​வர் பொதுக்​குழுவை கூட்டி ஆலோ​சிக்​கிறோம் என்​கிறார். அவரது மொத்த கட்​சி​யையே கலைஞர் அரங்​கத்​துக்​குள்​ளேயே கூட்டி விடலாம். அவரெல்​லாம் பேசுகிறார். எனவே, தயவு செய்து திமுக தலை​வர் இனிமேல் கூட்​ட​ணியே இல்லை என அறிவிக்க வேண்​டும்” என்​றார்.

இக்​கரைக்கு அக்​கரை பச்சை: முத்​தரசன் ‘பஞ்ச்’ பேச்சு

விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லுவார்கள். அதாவது, ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேயும். அப்போது இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையை பார்க்கும்போது பசுமையாக தெரியும். இதனால், முதலில் ஒரு ஆடு செல்லும், அதைத் தொடர்ந்து மற்றொரு ஆடு, பின்னர் ஒரு மந்தையே அந்தப் பக்கம் சென்று விடும்.

ஆனால், அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். எங்கேயாவது மட்டும் கொஞ்சம் பச்சை தெரியும், அங்கு ஒன்றுமே இருக்காது. வந்து விட்டோம், உடனே திரும்பிவிட்டால், அந்தப் பகுதி நம்மை ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக் கொள்ளாதா? என தெரியாது. 2 நாட்கள் இருந்துவிட்டாவது சென்று விடுவோம் என்று நினைக்கும். இப்படியான ஒரு சூழல் உள்ளது. இது யாரை குறிப்பிட்டும் நான் சொல்லவில்லை என்றார்.

SCROLL FOR NEXT