சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் |கோப்புப் படம்

 
தமிழகம்

கோயில்களுக்கு ​முதியோர் எளிதாக சென்று வர பேருந்து வசதி, சிறப்பு ஏற்பாடுகள் செய்ய ஆலோசனை

சுற்​றுலாத் துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: 60 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள் ஆன்​மிக தலங்​கள், கோயில்​களுக்கு எளி​தாக சென்று வர பேருந்து வசதி​கள் மற்​றும் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​வது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​வ​தாக சுற்​றுலாத் துறை அமைச்​சர் ராஜேஷ்குமார் தெரி​வித்​துள்​ளார்.

திருச்​சி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் உள்ள 38 மாவட்​டங்​களி​லும் சுற்​றுலா மேம்​பாட்​டுக்​கான சாத்​தி​யக் கூறுகளை கண்​டறிந்​து, அதற்​கேற்ப புதிய திட்​டங்​களைச் செயல்​படுத்த முதல்​வரின் கவனத்​துக்​குக் கொண்​டு​சென்​று, நல்ல வளர்ச்​சிமிகு திட்​டங்​களை அறி​விப்​போம்.

பூங்​காக்​கள் அமைப்​பது, நதி​களை இணைக்​கும் சுற்​றுலா முறையை உரு​வாக்​கு​வது மற்​றும் வேளாங்​கண்​ணி, நாகூர் போன்ற ஆன்​மிகத் தலங்​களுக்குச் சென்று வருபவர்​கள் ஓய்​வெடுக்​கும் வகை​யில், வசதி​களை ஏற்​படுத்​து​வது போன்ற பல்​வேறு திட்​டங்​கள் பரிசீலனை​யில் உள்​ளன.

60 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள் ஆன்​மிகத் தலங்​கள் மற்​றும் கோயில்​களுக்கு எளி​தாக சென்று வர பேருந்து வசதி​கள் மற்​றும் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​வது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​கிறது. அரசி​யல் ஆரோக்​கிய​மாக​வும், நாகரிக​மாக​வும் இருக்க வேண்​டும். மூத்த அரசி​யல்​வா​தி​யான நயி​னார் நாகேந்​திரன் தாழ்ந்த விமர்​சனங்​களை செய்​வது மிகப்​பெரிய தவறு.

தமிழகத்​தில் ஜோக்​கர் ஆட்சி நடை​பெறு​வ​தாக எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தெரி​வித்​துள்​ளார். முதலில் அவரது கட்சி ஆட்​சிக்கு வராமல் போனதற்​கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT