சென்னை உயர் நீதிமன்றம்

 
தமிழகம்

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க மனு: பேரவைத் தலைவர் தொடர்ந்து விசாரிப்பார் என நீதிமன்றத்தில் பேர​வைச் செயலர் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அ​தி​முக எம்​எல்​ஏ-க்​கள் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்​தா​லும் அவர்​களை தகுதி நீக்​கம் செய்​யக்​கோரும் மனுக்​களை பேர​வைத் தலை​வர் தொடர்ந்து விசா​ரி்ப்​பார் என சட்​டப்​பேர​வைச் செயலர் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் பதில்​மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தவெக அரசுக்கு ஆதர​வாக சட்​டப்​பேர​வை​யில் நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்பில், அதி​முகஎம்​எல்​ஏ-க்​கள் பலர் கட்சி கொறடா உத்​தரவை மீறி அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். அவர்​களை தகுதி நீக்​கம் செய்​ய பேர​வைத் தலை​வரிடம் அதிமுக மனு அளித்தது.

இந்த சூழலில் அதி​முக எம்​எல்​ஏ-க்​களான மது​ராந்​தகம் குமர​வேல், பெருந்​துறை ஜெயக்​கு​மார், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்​பையா ஆகியோர் தங்​களது பதவியை ராஜி​னாமா செய்​வ​தாகக்​கூறி பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தனர். அவர்​களி்ன் ராஜி​னா​மாவை ஏற்று பேர​வைத் தலை​வரும் உத்​தர​விட்​டார். அதையடுத்து அவர்​கள் 4 பேரும் தவெக-​வில் இணைந்​தனர்.

தகுதி நீக்​கம் செய்​யக்​கோரும் மனு நிலு​வை​யில் உள்ள நிலை​யில் இந்த 4 எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னா​மாவை ஏற்று பேர​வைத் தலை​வர் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி அதி​முக கொறடா அக்ரி கிருஷ்ண​மூர்த்தி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இதுதொடர்​பாக சட்​டப்​பேர​வைச் செயலர் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட 4 அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏ-க்​கள் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்து விசா​ரணை தள்ளி வைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் சட்​டப்​பேர​வைச் செயலர் சாந்தி தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள பதில்​மனு​வில், ‘4 அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஏற்​றுக் கொண்​ட​தால் மட்​டுமே அவர்​கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை செல்​லாத​தாகி விடும் எனக்​கூறு​வது தவறானது. ராஜி​னா​மாவை ஏற்​றுக் கொண்​ட​தால் அவர்​கள் தகுதி நீக்க நடவடிக்​கை​யில் இருந்து விடுவிக்​கப்​படு​வர் எனக்​கூற முடி​யாது. அவர்​கள் ராஜி​னாமா செய்​தா​லும் அவர்​களை தகு​திநீக்​கம் செய்​யக்​கோரும் மனுக்​களை பேர​வைத் தலை​வர் தொடர்ந்து விசா​ரிப்​பார்.

அந்த விசா​ரணை​யில் இறுதி முடிவு எட்​டிய பிறகே நீதி​மன்​றம் இந்த விவ​காரத்​தில் தலை​யிட முடி​யும். இதன்​மூல​மாக உரு​வாகி​யுள்ள காலி​யிடங்​களுக்கு தேர்​தல் நடத்​தக்​கூ​டாது என கோரு​வது ஏற்​புடையதல்ல. 4 எம்​எல்​ஏ-க்​களும் தாமாக முன்​வந்து அளித்​துள்ள ராஜி​னாமா கடிதங்​களை பேர​வைத் தலை​வர் ஏற்​றுக்​கொண்​டதன், உண்​மைத்​தன்மை குறித்து சந்​தேகம் கொள்ள எந்த ஆதா​ர​மும் இல்​லை.

பேர​வைத் தலை​வர் சட்ட ரீதி​யாக தனது அரசி​யல் சாசன கடமை​யைத்​தான் நிறைவேற்​றி​யுள்​ளார். பேர​வைத் தலை​வர் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்​றுக்​கொண்​டதற்கு எந்த அவசர​மும் இல்​லை, உள்​நோக்​க​மும் இல்​லை. ராஜி​னா​மாவை ஏற்​ப​தற்கு முன்​பாக தகுதி நீக்​கம் செய்​யக்​கோரும் மனு மீது முடிவு எடுக்க வேண்​டும் என எந்த விதி​களும் இல்​லை. தகுதி நீக்​கம் செய்​யக்​கோரும் மனுக்​களை பேர​வைத் தலை​வர் குறித்த காலத்​துக்​குள் விசா​ரித்து முடிவு எடுப்​பார் என்​ப​தால் இந்த வழக்​கு​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும்’ எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்​கில் இசக்கி சுப்​பையா தரப்​பில் பதில்​மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில் மற்ற 3 எம்​எல்​ஏ-க்​கள் பதில்​மனு தாக்​கல் செய்​யாத​தால், இந்த வழக்கு வி​சா​ரணையை தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர்​ அடங்​கிய அமர்​வு வரும்​ ஜூலை 13-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT