ஆர்.கே.பேட்டையில் பாமக சார்பில் நடைபெற்ற ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, பெண்கள் மற்றும் பாமகவினரை பார்த்து கையசைத்த காட்சி.

 
தமிழகம்

மக்கள் கேட்ட நல்ல திட்டங்களை கொண்டு வராமல், டாஸ்மாக் மதுபான கடைகளை திமுக அரசு திறக்கிறது: சவுமியா அன்புமணி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: ‘மக்​கள் கேட்ட நல்ல திட்​டங்​களை எல்​லாம் கொண்டு வராமல், யாரும் கேட்​காத டாஸ்​மாக் மது​பான கடைகளை திமுக அரசு திறக்​கிறது’ என, ‘பசுமைத் தாயகம்’ அமைப்பு தலை​வர் சவுமியா அன்​புமணி குற்​றம் சாட்​டி​னார். ‘பசுமைத் தாயகம்’ அமைப்பு தலை​வர் சவுமியா அன்​புமணியின் ‘தமிழக மகளிர் உரிமை மீட்​புப் பயணம்’நிகழ்வுநேற்று திரு​வள் ளூர் மாவட்​டம், திருத்​தணி அருகே ஆர்​.கே.பேட்​டை​யில் நடை​பெற்​றது.

இதில், சவுமியா அன்​புமணி பேசி​ய​தாவது: ஆந்​திர மாநிலத்​தின் எல்​லை​யோரத்​தில் உள்​ள​தால், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் அதி​கள​வில் கஞ்சா கடத்​தப்​படு​கிறது. இதனால், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் மட்​டும் 60 ஆயிரம் கிலோ கஞ்சா புழங்​கு​வ​தாக தகவல் வரு​கிறது.

திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் அதி​கள​வில் கஞ்சா புழங்​கு​வ​தால், இளைஞர்​களிடையே ஏற்​பட்​டுள்ள போதை பழக்​கத்​தால், பொதட்​டூர்​பேட்​டை​யில் இன்​சூரன்ஸ் பணத்​துக்​காக இரு மகன்​கள், தந்​தையையே பாம்பு கடிக்​கச் செய்து கொன்​றுள்​ளனர். அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த இளைஞ​ரால், கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கத்​தில் சிறுமி ஒரு​வர் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​டுள்​ளார்.

டாஸ்​மாக் மது​பான கடையை திறப்​ப​தற்கு எதற்​காக ஒரு அரசாங்​கம் நமக்கு வேண்​டும்? திருத்​தணி​யில் ஒரு நெசவு பூங்கா கொண்டு வரவேண்​டும். திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பூ விவ​சா​யிகளுக்கு ஒரு நறுமணப் பொருட்​கள் தயாரிக்​கும் ஆலை அமைக்க வேண்​டும் என்று பொது​மக்​கள் கோரிக்கை வைத்​தார்​கள். அந்த கோரி​கைகளை திமுக அரசு நிறைவேற்​ற​வில்லை.

மக்​கள் கேட்ட நல்ல திட்​டங்​களை எல்​லாம் கொண்டு வராமல், யாரும் கேட்​காத டாஸ்​மாக் மது​பான கடைகளை திமுக அரசு திறக்​கிறது. ஆகவே, வரக்​கூடிய சட்​டப்​பேரவை தேர்​தலில் பொது​மக்​கள் சிந்​தித்து நல்ல முடிவை எடுத்​து, பாமக தலை​வர் அன்​புமணி பின்​னால் நிற்​கவேண்​டும். அப்​படி நின்​றால்​தான், மது போதை இல்​லா தமிழ்​நாடு உரு​வாகும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

பாமகவினர் வாக்குவாதம்: சவுமியா அன்புமணி, நேற்று காலை திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சௌமியா அன்புமணியுடன் 5 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருடன் வந்த 20-க்கும் மேற்பட்ட பாமகவினர் அனுமதி மீறி கோயில் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை கோயில் ஊழியர்கள் தடுத்தனர். இதையடுத்து, கோயில் ஊழியர்களிடம் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT