சக்​திவேல்

 
தமிழகம்

ஜம்மு, காஷ்மீரில் வீரமரணமடைந்த திருத்தணியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்று நல்லடக்கம்

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: ஜம்​மு, காஷ்மீரில் தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் வீரமரணமடைந்த திருத்தணி பகு​தியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்​று சொந்த ஊரில் நல்​லடக்​கம் செய்​யப்பட உள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், திருத்தணி அருகே சத்​திரம் ஜெயபுரம் கிராமத்​தைச் சேர்ந்த கன்​னிவேல் என்​பவரின் மகன் சக்​திவேல் (30). இவர், இந்​திய ராணுவத்​தில் கடந்த 2018-ம் ஆண்டு பணி​யில் சேர்ந்து ஜம்​மு-​காஷ்மீரில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் எல்லை பகு​தி​யில் பணி​யாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன் தினம் காலை 11 மணி​யள​வில், சக்​திவேல் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, ராணுவத்​தினருக்​கும், தீவிர​வா​தி​களுக்​கும் இடையே சண்டை நடை​பெற்​றது.

இதில், சக்​திவேல் வீரமரணம் அடைந்​தார். இந்த தகவல், இந்​திய ராணுவம் சார்​பில், சக்​திவேல் குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவரது உடல் ஜம்​மு, காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்​து, விமானம் மூலம் சென்​னைக்கு கொண்டு வரப்​படும்.

சொந்த ஊரான சத்​திரம் ஜெயபுரம் வந்​ததும், டிச. 6-ம் தேதி (இன்​று) குடும்​பத்​தினர், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​திய பின்​னர் ராணுவ மரி​யாதை​யுடன் நல்​லடக்​கம் செய்​யப்பட உள்​ளது.வீரமரணம் அடைந்த சக்​திவேலுக்கு மனைவி (தேவ (26)), மகள் (ஆஷிகா செர்​லின் (4)), மகன் (லெனின் அக்​ரன் (2)) உள்​ளனர்.

SCROLL FOR NEXT