தமிழகம்

​திருப்​பூர்: வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்​பூர் மாவட்​டம் வெள்​ளகோ​வில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்​தில் காவலர், லாரி ஓட்​டுநர் மற்​றும் ஒரே குடும்​பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயி​ரிழந்​தனர்.

வெள்​ளகோ​விலில் இருந்து கரூர் செல்​லும் சாலை​யில் தனி​யார் பள்ளி அரு​கில் சோதனைச்சாவடி உள்​ளது. இந்த சோதனைச்​சாவடி​யில் நேற்று முன்​தினம் இரவு தாராபுரத்​தைச் சேர்ந்த காவலர் ரவிச்​சந்​திரன் (35) பணி​யில் இருந்​தார்.

அப்​போது, பண்​ருட்​டி​யில் இருந்து வெள்​ளகோ​வில் நோக்கி சவுக்கு மரங்​களை ஏற்​றிய லாரி வந்து கொண்​டிருந்​தது. எதிர்​பா​ராத​வித​மாக, சோதனைச் சாவடி​யில் இருந்த இரும்​புத் தடுப்​பின்​மீது லாரி மோதி​யது. இதையடுத்​து, லாரியை ஓரமாக நிறுத்​தி​விட்டு இறங்​கிய ஓட்​டுநர் செந்​தில் (35), இரும்​புத் தடுப்பை சரி செய்​யும் பணி​யில் ஈடுபட்​டார். அவருக்கு உதவியாக காவலர் ரவிச்​சந்​திரனும் இரும்​புத் தடுப்பை அகற்​றி​விட்​டு, போக்​கு​வரத்தை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார்.

அப்​போது, மயி​லாடு​துறை​யில் இருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று கட்​டுப்​பாட்டை இழந்து காவலர் ரவிச்​சந்​திரன், செந்​தில் ஆகியோரை இடித்து தள்​ளி​விட்​டு, லாரி மீது மோதி​யது.

இதில் கார் நொறுங்கி சேதமடைந்​தது. இந்த விபத்​தில் காவலர் ரவிச்​சந்​திரன், லாரி ஓட்​டுநர் செந்​தில், காரை ஓட்டி வந்த ராம்​(22), மயி​லாடு​துறையைச் சேர்ந்த நரசிம்​மன் (62), அவரது மனைவி சாந்​தலட்​சுமி (55), இவர்​களது மகன் பாலாஜி (29) ஆகியோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்த தகவலறிந்த வெள்​ளகோ​வில் காவல் துறை​யினர் உயி​ரிழந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

மேலும், சம்பவ இடத்​தை கோவை சரக டிஐஜி சாமி​நாதன், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் (பொறுப்​பு) சாமி​நாதன் ஆகியோர் நேரில் பார்​வை​யிட்டு விசா​ரணை நடத்​தினர். விபத்து குறித்து விசா​ரணை நடக்​கிறது. உயி​ரிழந்த நரசிம்​மன் மயி​லாடு​துறை கோயி​லிலும், மகன் பாலாஜி கோவை பாப்​ப​நாயக்​கன் பாளை​யத்​தில் உள்ள கோயி​லிலும் குருக்​களாக பணி​யாற்றி வந்​தனர்​.

ரூ.30 லட்சம் நிவாரணம்: இந்த விபத்து குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளகோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தலைமை நிலையக் காவலர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது உயிரிழப்பு தமிழக காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT