தமிழகம்

செங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 சிறார்களை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப்படை

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: செங்​குன்​றம் பகு​தி​யில் பிச்சை எடுத்​துக் கொண்​டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறு​வனை சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை​யினர் மீட்​டு, குழந்​தைகள் நலக்​குழு​வினரிடம் ஒப்​படைத்​துள்​ளனர்.

பெண்​களின் பாது​காப்பை உறு​தி​ செய்​யும் வகை​யில், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அதிரடிப் படை​யினர் ரோந்து மற்​றும் கண்​காணிப்​புப் பணி​களி​லும், பெண்​கள் பாது​காப்பு குறித்து விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் பணி​களி​லும் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், திருவள்​ளூர் ஆட்​சி​யர் கவி​தா​வின் உத்​தர​வின்​படி​யும், தொழிலா​ளர் உதவி ஆணை​யர் (அமலாக்​கம்) சாந்​தி​யின் அறி​வுறுத்​தலின்​படி​யும் திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள பேருந்து நிலை​யங்​கள், ரயில் நிலை​யங்​கள், சுற்​றுலாத் ​தலங்​கள், கோயில்​கள், சாலைகளில் சுற்​றித்​திரி​யும் மற்​றும் பிச்சை எடுத்​துக் கொண்​டிருக்​கும் குழந்​தைகளைக் கண்​டறிந்​து, அவர்​களை மீட்​டு, மறு​வாழ்வு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளும் பணிகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இதற்​காக தொழிலா​ளர் நலத்​துறை அலு​வலர்​கள், மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலகு மற்​றும் சைல்ட் லைன் உறுப்​பினர்​கள், வரு​வாய்த் துறை அலு​வலர்​கள், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை மற்​றும் அரசு சாரா அமைப்​பின் பிர​தி​நி​தி​கள் கொண்ட மாவட்ட தடுப்​புப்​படை குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இக்​குழு சமீபத்​தில் ஆவடி, பொன்​னேரி மற்​றும் செங்​குன்​றம் பகு​தி​களில் உள்ள பேருந்து நிலை​யங்​கள் மற்​றும் போக்​கு​வரத்து சிக்​னல்​களில் கூட்​டாக ஆய்வு மேற்​கொண்​டது.

இ​தில் செங்​குன்​றம் பகு​தி​யில் பிச்சை எடுத்​துக் கொண்​டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறு​வனை சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை​யினர் மீட்​டு, குழந்​தைகள் நலக்​குழு​வினரிடம் ஒப்​படைத்​தனர். மீட்​கப்​பட்​ட​வர்​களின் மறு​வாழ்​வுக்​கான நடவடிக்​கைகளை மேற்​கொண்​டு வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT