பெ.சண்முகம் | கோப்புப்படம் 
தமிழகம்

“ஆட்சி, அதிகாரம் இல்லாததை திமுகவால் ஏற்க முடியவில்லை”- பெ.சண்முகம் விமர்சனம்

செய்திப்பிரிவு

கோவை: ஆட்​சி, அதி​காரம் இல்​லாததை திமுக​வால் ஏற்க முடிய​வில்லை என, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​தார்.

கோவை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: மக்​கள் ஆட்சி மாற்​றம் வேண்​டும் என்​ப​தற்​காக, தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு இந்த தீர்ப்பை கொடுத்​துள்​ளனர். ஆட்​சி, அதி​காரம் இல்​லாமல் இருப்​பதை திமுக​வால் ஏற்க முடிய​வில்​லை. எப்​படி​யா​வது இந்த ஆட்​சியை கவிழ்க்க வேண்​டும். மீண்​டும் ஆட்​சிக்கு வரவேண்​டும் என்ற முறை​யில் தவெக எம்​எல்​ஏ​விடம் பேரம் பேச முயற்சி நடை​பெற்று இருப்​ப​தாக தெரி​கிறது.

சில நாட்​களுக்கு முன்​பாக திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், விரை​வில் ஆட்சி மாற்​றம் வரும் என்று பேசிய பேச்​சின் பின்​னணி என்ன என்​பது, எம்​எல்​ஏக்​களை கோடிக்​கணக்​கில் விலை பேசிய நபர்​களை கைது செய்​த​தில் இருந்து தெரிய​வருகிறது. சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் தாங்​களாக விரும்​பி, வேறு கட்​சி​யில் இணைவது என்​பது சாதாரண விஷ​யம்.

எம்​எல்​ஏக்​களை விலைபேசி​யது யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்து சட்ட ரீதி​யான தண்​டனை பெற்​றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். முன்​ன​தாக, கோவை​யில் தற்​கொலை செய்து கொண்ட மாணவி அனு கீர்த்​தனா குடும்​பத்​தினரை பெ.சண்​முகம் சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT