தமிழகம்

எழும்பூர் நடைமேம்பால பணிகளால் மலைக்கோட்டை உட்பட 9 விரைவு ரயில்களின் சேவை​ நாளை முதல் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் நடைமேம்​பாலப்​பணி நடை​பெற உள்​ள​தால் 9 ரயில்​களின் சேவை​கள் நாளை (ஆக.5) முதல் மாற்​றப்​பட​வுள்​ளன.

மின்​சார ரயில்​களின் சேவை​யில் ஆக.22 முதல் 30-ம் தேதிவரை மாற்​றம் செய்​யப்பட உள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.734.91 கோடி​யில் மறுசீரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இதன் ஒருபகு​தி​யாக, பிரம்​மாண்ட நடைமேம்​பாலம் அமைக்க முதல்​கட்ட பணி​கள் கடந்த பிப்​ர​வரி​யில் தொடங்​கியது. இதையடுத்​து, விரைவு, மின்​சார ரயில்களின் சேவை​யில் மாற்​றம் செய்யப்​பட்​டன. முக்​கியப் பணி​கள் முடிந்த பிறகு, ரயில்களின் இயக்​கம் சீரானது.

மின்​சார ரயில்​களும் வழக்​கம் ​போல, 10, 11-வது நடைமேடை​யில் இருந்து இயக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், மூன்​றாம் கட்​ட​மாக, நடைமேம்​பாலப் பணி​களுக்​காக, சில விரைவு ரயில்​கள் சேவை நாளை (ஆக.5) முதல் தாம்​பரத்​துக்கு மாற்​றப்பட உள்​ளன.

இதுத​விர, மின்​சார ரயில் சேவை​யிலும் மாற்​றம் செய்​யப்பட உள்​ளன. இதுகுறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்​புத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, அனைத்து நடைமேடைகளை​யும் இணைக்​கும் வித​மாக, புதிய நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​கள் மேற்​கொள்ளப்பட உள்​ளன.

இப்​பணி​களை மேற்​கொள்​ளும் வகை​யில், ஆக.5 முதல் 30-ம் தேதி வரை, தின​மும் 5 மணி நேரம் ரயில் பாதையை மூட​வும், மின்​சா​ரத்தை நிறுத்​த​வும் ரயில்வே நிர்​வாகம் அனு​மதி அளித்​துள்​ளது.

இந்த நேரத்​தில் 6 முதல் 11-வது நடைமேடை வரை நடைமேம்​பாலம் அமைப்​ப​தற்​கான தூண்​கள் நிறு​வுதல், கர்​டர்​கள் பொருத்​துதல் ஆகிய பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். இப்​பணி​களைப் பொருத்​தவரை தற்​போது, வரை 50 சதவீதம் பணி​கள் முடிந்​துள்​ளன. மீத​முள்ள பணி​கள் ஆக.5-ம் தேதி முதல் நடை​பெறவுள்​ளன.

விரைவு ரயில்​கள் மாற்​றம்

நடைமேம்​பாலப் பணி​கள் காரண​மாக, தஞ்​சாவூர் - எழும்​பூர், மங்​களூரு - எழும்​பூர், கொல்​லம் - எழும்​பூர், சேலம் - எழும்​பூர் ஆகிய விரைவு ரயில்​கள் தாம்​பரம் ரயில் நிலை​யம் வரை​யிலும், திருச்சி - எழும்​பூர் மலைக்​கோட்டை விரைவு ரயில் மாம்​பலம் ரயில் நிலை​யம் வரை​யிலும் ஆக.5-ம்

தேதி முதல் ஆக.19-ம் தேதி வரை இயக்​கப்​படும்.

அதே​போல், மறு​மார்க்​க​மாக இந்த ரயில்​கள் அனைத்​தும் ஆக.6 முதல் ஆக.20-ம் தேதி வரை தாம்​பரத்​தில் இருந்து இயக்​கப்​படும் குஜ​ராத் மாநிலம் ஆமதா​பாத்​தில் இருந்து திருச்சி செல்​லும் விரைவு ரயில், ஆக.6, 13-ம் தேதி​களில் திருத்​தணி, செங்​கல்​பட்டு என மாற்​றுப் பாதை​யில் இயக்​கப்​படு​வ​தால், அரக்​கோணம், பெரம்​பூர், எழும்​பூர் வழி​யாக செல்​லாது.

அதே​போல், திருச்சி - ஆமதா​பாத் விரைவு ரயில், ஆக. 9, 16-ம் தேதி​களில் செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திருத்​தணி வழி​யாக செல்​வ​தால், எழும்​

பூர், பெரம்​பூர் வழி​யாகச் செல்​லாது மின்​சார ரயில்​கள் ரத்து கடற்​கரை - தாம்​பரம் - செங்​கல்​பட்டு வழித்​தடங்​களில் இயக்​கப்​படும் சில மின்​சார ரயில் சேவை​கள் ஆக.22 முதல் ஆக.30-ம் தேதிவரை முழு​மை​யாக​வும், பகு​தி​யாக​வும் ரத்து செய்​யப்​பட​வுள்​ளன. அதுபற்​றிய விவரம்​ விரை​வில்​ வெளி​யிடப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT