சென்னை உயர் நீதிமன்றம்

 
தமிழகம்

தேவாலயங்களின் சொத்துகளை நிர்வகிக்க தனி அமைப்பு? - அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அறநிலை​யத் துறை, வக்பு வாரி​யம் போல கிறிஸ்​தவ தேவால​யங்​களின் சொத்​துகளை நிர்​வகிக்க தனி அமைப்பை உரு​வாக்​கு​வது தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிஎஸ்ஐ தூத்​துக்​குடி - நாசரேத் மறை மாவட்​டத் தேர்தலில் வெற்றி பெற்​றவர்​கள் தொடர்ந்த மேல்​முறை​யீட்டு வழக்கு நேற்று நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், ஆர்​.சக்​திவேல் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. இதில் அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் பின்னர் பிறப்​பித்த உத்​தர​வு: சிஎஸ்ஐ தூத்​துக்​குடி - நாசரேத்மறை​மாவட்ட தேர்​தல் தொடர்​பாக தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிப்பதுடன், இந்த வழக்கை இரு தரப்​புக்​கும் வாய்ப்​பளித்து மீண்​டும் விசா​ரிக்க வேண்​டும்.

          

கிறிஸ்​தவ தேவால​யங்​கள் தொடர்​பாக ஏராள​மான வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. தேவால​யங்​களின் பெயரில் ஏராள​மான சொத்​துகள், கல்வி நிறு​வனங்​கள், மருத்​து​வ​மனை​களும் இயங்கி வரு​கின்​றன. இதனால் திரு​மண்​டில அளவி​லான தேவாலய தேர்​தல்​களில் பதவியை யார் கைப்​பற்​று​வது என்​ப​தில் போட்​டி​யும் கடுமை​யாக நில​வு​கிறது.

நாட்​டில் உள்ள கிறிஸ்தவ தேவாலய சொத்​துகளை பாது​காப்​பது அவசி​ய​மானது. ஏற்​கெனவே தமிழகத்​தில் இந்து கோயில்​களை நிர்​வகிக்​க​வும், சொத்​துகள் மற்​றும் இதர செல​வினங்​களை முறைப்​படுத்​த​வும் அறநிலை​யத் துறை இயங்கி வரு​கிறது. அதே​போல இஸ்​லாமியர் சொத்​துகளை முறைப்​படுத்த வக்பு வாரி​யம் உள்​ளது.

எனவே, கிறிஸ்தவ தேவலா​யங்​களின் நிர்​வாகம் மற்​றும் நிதிமேலாண்​மையை ஒழுங்​குப்​படுத்​த புதி​தாக ஒரு அமைப்பை உரு​வாக்க வேண்​டும். இந்த வழக்​கில் மத்​திய உள்​துறை அமைச்சக செயலர், தமிழக தலைமை செயலரை எதிர் மனு​தா​ரர்​களாக சேர்க்​கிறோம். அவர்​கள் கிறிஸ்​தவ தேவாலய சொத்​துகள், கல்வி நிலையங்​கள், மருத்​து​வ​மனைகளை சட்டப்பூர்வமாக நிர்வகிக்க அமைப்பை உருவாக்குவது தொடர்பாக பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT