தமிழகம்

நோட்​டுக்கு வாக்கு; நாட்​டுக்கு வேட்டு: சீமான் ரைமிங்

செய்திப்பிரிவு

நோட்​டுக்கு வாக்கை விற்​றால், அது நாட்​டுக்கு வேட்டு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசி​னார்.

திண்டுக்கல் மாவட்​டம் வேடசந்​தூரில் நாதக வேட்​பாளர்​களை ஆதரித்து நடந்த தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் சீமான் பேசி​ய​தாவது: தமிழ்​நாட்டை அதி​முக​வும், திமுக​வும் 60 ஆண்​டு​களாக மாறி மாறி ஆட்சி செய்து வரு​கின்​றன. ஊழல், லஞ்​சத்தை பெருக்​கு​வ​தி​லும், இயற்கை வளங்​களை கொள்ளை அடிப்​ப​தி​லும், மக்​களின் நலன்​களை கெடுப்​ப​தி​லும் இந்த 2 கட்​சிகளும் போட்​டிப் போட்​டுக் கொண்டு செயல்​படு​கின்றன. இந்த நாட்​டை​யும், நாட்டு மக்​களை​யும் வாழ விட வேண்​டும் என்ற எண்​ணம் இல்​லாத கட்​சிகள் தான் இவை.

          

தமிழகத்​தில் ரூ.10.5 லட்​சம் கோடிக்கு கடன் வைத்​துள்​ளனர். தமிழ்​நாட்​டின் பட்​ஜெட் ரூ.3 லட்​சம் கோடி தான். வட்​டியே ரூ.1 லட்​சம் கோடிக்கு மேல் கட்​டு​வ​தால் ஆசிரியர்​கள், செவிலியர்​கள், போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களுக்கு சம்​பளம் கொடுக்க முடிய​வில்​லை. சாரா​யம் விற்று ரூ.50 ஆயிரம் கோடி வரு​மானம் பெற்​று, அதில் அரசு நடத்​தப்​படு​கிறது.

ஃபிரிட்​ஜ், தாலிக்கு தங்​கம், 6 சிலிண்​டர், ரூ.8 ஆயிரம் கூப்​பன் இதற்​கெல்​லாம் எங்​கிருந்து காசு வரும். நோட்​டுக்கு வாக்கை விற்​றால், அது நாட்​டுக்கு வேட்​டு. திருடனில் என்ன சின்ன திருடன், பெரிய திருடன். தி​முக​வும் அதி​முக​வும்​ ஒன்​று​தான்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்.

SCROLL FOR NEXT