டிட்வா புயல் காரணமாக, சென்னையில் 2-வது நாளாக 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிட்வா புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் மற்றும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் மற்றும் ஹைதராபாத் பெங்களூர் இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 27 புறப்பாடு விமானங்கள், 27 வருகை விமானங்கள் என மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், 2-வது நாளான நேற்று 24 புறப்பாடு விமானங்கள், 23 வருகை விமானங்கள் என மொத்தம் 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், விமான பயணிகள் அனைவரும், தங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்கள் விமானங்கள் புறப்படும், வரும் நேரங்கள் போன்றவைகளை கேட்டு அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல், தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.