தமிழகம்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: திண்டுக்கல் நிதி நிறுவன உரிமையாளரிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: சபரிமலை கோயி​லில் தங்​கம் திருடப்​பட்ட வழக்கு தொடர்​பாக திண்​டுக்​கல்லை சேர்ந்​தவரிடம் கேரள போலீ​ஸார் நேற்று விசா​ரணை நடத்​தினர். சபரிமலை ஐயப்​பன் கோயில் கரு​வறை வாயி​லில் இரு​புற​மும் உள்ள துவார பால​கர்​கள் சிலைகளில் அணிவிக்​கப்​பட்டு இருந்த தங்க கவசங்​கள் 2019-ல் கழற்​றப்​பட்​டு, செப்​பனிடும் பணிக்காக சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

​திரு​வி​தாங்​கூர் தேவசம்​ போர்டு செப்​பனிடும் பணிக்​காக நகைகளை ஒப்​படைத்​த​ போது எடை 42.8 கிலோவாக இருந்​தது. செப்​பனிட்ட பிறகு சென்​னையை சேர்ந்த நிறு​வனம் திரும்ப ஒப்​படைத்​த​போது எடை​யில் 4.54 கிலோ குறைந்து இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து விசா​ரணை நடத்த நீதிப​தி​கள் ராஜா விஜயராகவன், ஜெயக்​கு​மார் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து கேரள அரசு உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், முன்​னாள் தேவசம்​போர்டு நிர்​வாக அதி​காரி எஸ்​.சிவக்​கு​மாரை கைது செய்து விசா​ரணை நடத்​தி​ய​தில், 400 கிராம் தங்​கத்தை எடுத்​து, கர்​நாடக மாநிலம் பெல்​லாரி மாவட்​டத்தை சேர்ந்த தங்க வியா​பாரி கோவர்​தனிடம் கொடுத்​த​தாக தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து சிறப்பு புல​னாய்​வுக் குழு அதி​காரி​கள், தங்க வியா​பாரி கோவர்​தன் மற்​றும் ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயல் அதி​காரி பங்​கஜ்பண்​டாரி ஆகியோரைக் கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் கிடைத்த தகவலின்​பேரில், திண்​டுக்​கல்​லில் ரவுண்ட் ரோடு அருகே ராம்​நகர் பகு​தி​யில் ரியல் எஸ்​டேட் மற்​றும் நிதி நிறு​வனம் நடத்தி வரும் எம்​.எஸ்​.மணி என்ற சுப்​பிரமணி​யனிடம் நேற்று கேரள மாநில போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

மேலும், டிஎஸ்பி சுரேஷ்​பாபு தலை​மையி​லான போலீ​ஸார் அலு​வல​கத்​தில் சோதனை மேற்​கொண்​டு, அங்​கிருந்த கோப்​பு​களை ஆய்வு செய்​தனர். ஏறத்​தாழ 2 மணி நேரத்​துக்​கும் மேலாக சுப்​பிரமணி​யனிடம் விசா​ரணை நடத்​திய போலீ​ஸார், பின்​னர் அங்​கிருந்து புறப்​பட்​டுச் சென்​றனர்.

இதுகுறித்து எம்​.எஸ்​.மணி என்ற சுப்​பிரமணி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “கேரள மாநில போலீ​ஸார் எதற்​காக விசா​ரணை நடத்​தினர் என்று தெரிய​வில்​லை. எந்த வழக்கு என்​றும் சொல்​ல​வில்​லை. எனது பெயர், தொழில் குறித்து கேட்​டனர். அவர்​கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்​தேன். அவர்​கள் தேடிவந்த நபர் நான் இல்லை என்று விசா​ரணை​யில் தெரி​வித்​து விட்​டேன்​" என்​றார்​.

SCROLL FOR NEXT