தமிழகம்

கல்லூரி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு: தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொதுச்​செய​லா​ளர் சோ.சுரேஷ், தமிழக தலைமை தேர்​தல் அலு​வலருக்கு அனுப்​பி​யுள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு துறை​கள், கல்வி மற்றும் பொதுத்​துறை நிறு​வனங்​களி​லும் குறைந்​த​பட்ச ஊழியர்​கள் தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​வது உறு​தி​செய்​யப்பட வேண்​டும் என மத்​திய தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளது.

ஆனால், அரசு கல்லூரிகளில் பணி​யாற்​றும் அனைத்து ஆசிரியர்​களை​யும், அலு​வலர்​களை​யும் கட்​டாய​மாக தேர்​தல் பணி​யாற்ற வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​கள் நிர்ப்​பந்​தம் செய்​கின்​றனர்.

இதனால், கல்வி பணி முற்​றி​லும் பாதிக்​கப்​படும். எனவே, குறைந்​த​பட்​சம் குறிப்​பிட்ட எண்​ணிக்​கையி​லான ஆசிரியர்​களுக்கு தேர்​தல் பணி​யில் இருந்து விலக்கு அளிக்க ஆவண செய்ய வேண்​டு​கிறோம். இவ்​வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT