புதுச்சேரியில் புதிதாக தேர்வான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

 
தமிழகம்

சட்டப்பேரவை கட்சித் தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்வு

என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் நடந்த என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யின் எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில், அக்கட்​சி​யின் சட்​டப்​பேர​வைத்​ தலை​வ​ராக ரங்​க​சாமி மீண்​டும் தேர்வு செய்யப்பட்டார். அமைச்​சர்​கள் யார் யார் என்​பதை ரங்​க​சாமி விரை​வில் முடிவு செய்ய உள்​ளார்.

புதுச்​சேரி​யில் புதுச்​சேரி, காரைக்​கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்​தி​யங்​கள் உள்​ளன. இதற்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப். 9-ம் தேதி நடை​பெற்​றது. இங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கும் இண்​டியா கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி நில​வியது.

என்​டிஏ கூட்​ட​ணி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ், பாஜக, அதி​முக, புதி​தாக உரு​வான லட்​சிய ஜனநாயக கட்சி உள்​ளிட்​டவை இடம்​பெற்​றிருந்​தன. இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் - திமுக இடையே ஏற்​பட்ட மோதலால் தொடக்​கம் முதலே பெரும் குழப்​பம் ஏற்​பட்​டு, தேர்​தலை சந்​தித்​தது. திமுக போட்​டி​யிட்ட 5 தொகு​தி​களில் காங்​கிரஸ் வேட்​பாளர்களும் நிறுத்​தப்​பட்​டனர். அத்துடன் இடது​சா​ரி​கள் தனித்​துப் போட்​டி​யிட்​டனர். விசிக​வுக்கு ஒதுக்​கிய தொகு​தி​யில் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள் போட்​டி​யிட்​டன.

தமிழகத்​தைப் போலவே புதுச்​சேரி​யிலும் கடந்த 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற்​றது. இதில், என்​டிஏ கூட்​டணி 18 இடங்​களை கைப்​பற்றி மீண்​டும் ஆட்​சி​யமைக்​கிறது. இக்​கூட்​ட​ணிக்கு தலை​மையேற்​றிருக்​கும் என்​.ஆர்​.​காங்​கிரஸ் 12 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. பாஜக 4 தொகு​தி​களை வென்​றுள்​ளது.

அதி​முக, லட்​சிய ஜனநாயகக் கட்சி முறையே ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றுள்​ளன. தேர்​தல் முடிவு வந்​ததைத் தொடர்ந்​து, என்​.ஆர்​.​காங்​கிரஸில் வெற்றி பெற்ற அனை​வரும், முதல்​வரும் என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யின் நிறு​வனரு​மான ரங்​க​சாமியை சந்​தித்து ஆசி பெற்​றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் காம​ராஜர் சாலை​யில் உள்ள ஓட்​டலில் கட்​சி​யின் எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் ரங்​க​சாமி தலை​மை​யில் நடந்​தது. இதில் பங்​கேற்ற எம்​எல்​ஏக்​கள் முதல்​வர் ரங்​க​சாமியை பேரவை கட்​சித் தலை​வ​ராக ஒரு​மன​தாக தேர்வு செய்​தனர். இதற்​கான கடிதத்​தில் எம்​எல்​ஏக்​கள் கையெழுத்​திட்​டனர்.

என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொடர்​வ​தாக முதல்​வர் ரங்​க​சாமி ஏற்​கெனவே அறி​வித்​துள்​ளார். மேலும் புதுச்​சேரி​யில் அமைச்​சர்​கள் பதவி யாருக்​கு, கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கு எத்​தனை அமைச்​சர்​கள்​ என்​பதை முதல்​வர்​ ரங்​க​சாமி முடிவு செய்​ய இருக்​கிறார்​.

SCROLL FOR NEXT