பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம் 
தமிழகம்

“சொல்ல எனக்கே வெட்கமா இருக்கு..” - பாமக நிறுவனர் ராமதாஸ் கூச்சம்

செய்திப்பிரிவு

“​பாமக வளர்ச்​சிக்​காக எப்​படி எல்​லாம் உழைத்​தேன் என்று மீண்​டும் மீண்​டும் தொடர்ந்து சொல்​வதற்கு எனக்கே வெட்​க​மாக உள்​ளது என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூச்​சத்​துடன் தெரி​வித்​தார்.

திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் ராம​தாஸ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​னார். அப்​போது அவர் சொன்​னது: தேர்​தல் ஆணை​யத்தை சந்​திக்க சென்ற எனது பிர​தி​நி​தி​களை சந்​திக்க மறுத்து விட்​டனர். அதன்​பிறகு​தான், தேர்​தல் ஆணை​யத்தை எதிர்த்து டெல்லி உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தோம். ஆனால், பொய்​களை கூறி வரும் அன்​புமணி தரப்பு ஆஜரா​னது. இவ்​வாறு ஆஜராக கூடாது. ஏதோ, பரி​தாபப்​பட்டு நீதிபதி அனு​மதி அளித்​துள்​ளார்.

இவ்​வழக்​கில் 34 பக்க தீர்ப்பு வழங்​கப்​பட்​டது. இதில், நாங்​கள் தான் பாமக என வெற்றி பெற்​றுள்​ளோம். நாங்​கள்​தான் பாமக, 96 ஆயிரம் கிரா​மங்​களுக்​குச் சென்​றேன், கால் தேய்ந்​தது கட்​சிக்​காக எப்​படி எல்​லாம் உழைத்​தேன் என்று மீண்​டும் மீண்​டும் தொடர்ந்து சொல்​வதற்கு எனக்கு வெட்​க​மாக இருக்​கிறது.

தமிழக மக்​களும், அரசி​யல் கட்சி தலை​வர்​களும் என் மீது பாச​மாக இருக்​கும் நிலை​யில், பாமக​வில் எனக்கு அதி​காரம் இல்லை என சொல்ல ஒரு பிள்ளை (அன்​புமணி) இருக்​கி​றார். நான் உரு​வாக்​கிய பாமகவை, வேறு ஒரு​வர் சொந்​தம் கொண்​டாட​வும், கொடியை பயன்​படுத்​த​வும் உரிமை கிடை​யாது. அன்​புமணி வேண்​டு​மா​னால் ஒரு புதிய கட்​சியை தொடங்​கலாம் என பலமுறை சொல்​லி​விட்​டேன்.

என்​னுடன் ஏன் சண்டை போட்டு கொண்டு இருக்​கி​றார். உங்​களுக்​கும் பாமக​வுக்​கும் என்ன சம்​பந்​தம்? தந்​தைக்​கும் மகனுக்​கும் இப்​படியொரு பிரச்​சினை வந்​திருக்​கக் கூடாது என தமிழக மக்​கள் ஆச்​சரிய​மாக கூறுகின்​ற​னர்.

கண் தெரிய​வில்​லை, காது கேட்​க​வில்​லை, படுத்த படுக்​கை​யாக இருக்​கி​றார் அவரை ஏன் தவறாக விமர்​சிக்​கின்​ற​னர் என கேள்வி எழுப்​பு​கின்​ற​னர். நான் சாப்​பிடும் உணவை, மற்​றவ​ருக்கு கொடுத்த பிறகு சாப்​பிடலாம் என என்​னுடன் இருப்​பவர் கூறுகி​றார். அந்த நபருக்கு அந்த விஷம் செல்​லா​தா? என்​னால், இன்​னொரு உயிர் போவது சரி​யாக இருக்​காது. அந்​தளவுக்கு நிலைமை இருக்​கிறது.

ஒட்​டு​கேட்பு கருவி வைத்​தது தொடர்​பாக புகார் அளித்​தும் சைபர் க்ரைம் போலீ​ஸார் பதில் கூற​வில்​லை. காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தும் நடவடிக்கை எடுக்​க​வில்​லை. நான் நியமித்த தனி​யார் ஏஜென்​ஸியை கூட, அன்​புமணி விலைக்கு வாங்​கி​விட்​டார். என் பெயரை​யும், புகைப்​படத்​தை​யும் அவர், பயன்​படுத்​தக்​கூ​டாது. அவருக்கு எந்த உரிமை​யும் கிடை​யாது.

ஒரு தவறு செய்​தவர், தொடர்ந்து தவறுகளை செய்து வரு​கி​றார். பாமக​வுக்​கும், அன்​புமணிக்​கும் சம்​மந்​தம் கிடை​யாது. 34 பக்க தீர்ப்​பிலும், அப்​படி​தான் இருக்​கிறது. ஆர்​.அன்​புமணி என இனிஷியலை போட்​டுக்​கொள்​ளலாம். தெரி​யாதது, சொல்​லாதது நிறைய இருக்​கிறது. எல்​லா​வற்​றை​யும் சொல்ல முடி​யாது. சொல்​ல​வும் கூடாது. எல்​லா​வற்​றை​யும் அனுப​வித்த உங்​களுக்​கு, எதற்கு கட்​சி. உங்​களுக்கு கட்​சியே தேவை​யில்லை என்​றார்.

SCROLL FOR NEXT