தமிழகம்

போலி ஆவணங்கள் கொடுத்து அங்கீகாரம்: அன்புமணி மீது டெல்லி போலீஸில் ராமதாஸ் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல்​ ஆணையம்​ மற்றும் அன்​புமணி மீது நட​வடிக்​கை எடுக்​கக்​ கோரி டெல்​லி ​காவல்​ துறை​யில்​ ​பாமக நிறுவனர் ராம​தாஸ்​ பு​கார்​ அளித்​துள்​ளார்​.

​பாமக நிறு​வனர்​ ​ராம​தாஸ்​, கட்​சித்​ தலை​வர்​ அன்​புமணி இடையே மோதல்​ நில​வும்​ சூழலில்​, 2026 ஆகஸ்ட்​ வரை ​பாமக தலை​வ​ராக அன்​புமணி​ செயல்​படு​வார்​ என்​று தெரி​வித்​த தேர்​தல்​ ஆணை​யம்​, ​மாம்​பழம்​ சின்​னத்​தை அன்​புமணி தரப்​புக்​கு ஒதுக்​கியது.

ஆ​னால்​, அன்​புமணி ​போலி ஆவணங்​கள்​ ​கொடுத்​து மோசடி செய்​திருப்​ப​தாக தேர்​தல்​ ஆணை​யத்​தில்​ ​ராம​தாஸ்​ ​முறை​யிட்​டார்​. இதை தேர்​தல்​ ஆணை​யம்​ ஏற்​க​வில்​லை. இதையடுத்​து, டெல்​லி உயர்​ நீ​தி​மன்​றத்​தில்​ ​ராம​தாஸ்​ தரப்​பில்​ வழக்​குத்​ தொடரப்​பட்​டது. இதை ​வி​சா​ரித்​த நீ​தி​மன்​றம்​, உரிமை​யியல்​ நீ​தி​மன்​றத்​தை அணுகு​மாறு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில்​, டெல்​லி ​நா​டாளு​மன்​ற வீ​தி​யில்​ உள்​ள ​காவல்​ துணை ஆணை​யர்​ அலு​வல​கத்​தில்​ ​ராம​தாஸ்​ ​சார்​பில்​ கட்​சி​யின்​ க​வுர​வத்​ தலை​வர்​ ஜி.கே.மணி உள்​ளிட்​டோர்​ பு​கார்​ மனு அளித்​தனர்​.

அந்​த மனு​வில்​, தேர்​தல்​ ஆணை​யத்​தில்​ ​போலி ஆவணங்​களைக்​ ​கொடுத்​து அன்​புமணி அங்​கீ​காரம்​ பெற்​றுள்​ள​தாக​வும்​, அவர்​ மீது நட​வடிக்​கை எடுக்​கு​மாறும்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​த பு​கார்​ மனு​வின்​ நகல்​ டெல்​லி ​காவல்​ ஆணை​யர்​ மற்​றும்​ சிபிஐ இயக்​குநருக்​கும்​ அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து ஜி.கே.மணி செய்​தி​யாளர்​களிடம்​ கூறும்​போது, "​போலி ஆவணங்​களை தேர்​தல்​ ஆணை​யத்​தில்​ ​கொடுத்​து அங்​கீ​காரம்​ பெற்​றுள்​ளனர்​. தேர்​தல்​ ஆணை​ய​மும்​, அன்​புமணி​யும்​ கூட்​டாக ச​தி செய்​துள்​ளனர்​. அவர்​கள்​ மீது சிபிஐ ​வி​சா​ரணை கோரி பு​கார்​ மனு அளித்​திருக்​கிறோம்​” என்​றார்​.

ஜி.கே.மணி மீது நட​வடிக்​கை: சென்​னை​யில் பாமக வழக்கறிஞர் பாலு செய்​தி​யாளர்களிடம் கூறும்​போது, “அன்​புமணி தரப்பை அங்​கீகரித்து தேர்​தல் ஆணை​யம் கடிதம் கொடுத்​துள்​ளது. இதற்​காக தேர்​தல் ஆணை​யம் மீதும், அன்​புமணி மீதும் நடவடிக்கை எடுக்​கு​மாறு ராம​தாஸிடம் கடிதம் பெற்​று, டெல்லி காவல் துறை​யில் ஜி.கே.மணி புகார் கொடுத்​துள்​ளார்.

பாமகவை உடைத்​து,கட்​சி​யைக் கைப்​பற்ற ஜி.கே.மணி முயல்​கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு அன்​புமணி​யிடம் தெரி​வித்​துள்​ளோம். பாமக தலை​வ​ராக அன்​புமணி தொடர்​வதை யா​ராலும் தடுக்க முடி​யாது” என்​றார்​.

SCROLL FOR NEXT