கோப்புப் படம்

 
தமிழகம்

பறக்கும் ரயில் தடத்தை ‘மெட்ரோ’ நிர்வாகத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஜூலை இறுதிக்குள் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் தெற்கு ரயில்வே​யின் கட்​டுப்​பாட்டில் உள்ள பறக்​கும் ரயில் வழித்​தடத்தை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​துடன் இணைக்க ரயில்வே வாரி​யம் ஜூலை இறு​திக்​குள் ஒப்​புதல் அளிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தெற்கு ரயில்வேயின் கட்​டுப்​பாட்​டின்​கீழ் சென்​னை​யில் பறக்​கும் ரயில் வழித்​தடம் (எம்​ஆர்​டிஎஸ்) கடந்த 1997-ம் ஆண்டு முதல் பயன்​பாட்​டில் இருக்​கிறது. கடற்​கரை - வேளச்​சேரி இடையே 19 கி.மீ. தூரத்துக்கு பறக்​கும் ரயில் சேவை இயங்கி வந்​தது.

பிறகு, வேளச்​சேரி - பரங்​கிமலை வரை நீட்​டிப்பு செய்​யப்​பட்​டு, இத்​தடம் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் பயன்​பாட்​டுக்கு வந்​தது. தற்​போது பறக்​கும் ரயில் தடத்​தில் மொத்​தம் 24 கி.மீ. தூரத்​துக்கு மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த ரயில்​களில் தின​மும் சராசரி​யாக 90 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணிக்​கின்​றனர். இதற்​கிடையே, பறக்​கும் ரயில் திட்​டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​தது.

இந்த திட்​டத்​துக்கு ரயில்வே வாரி​யம் கடந்த 2025 ஜூலை 31-ம் தேதி கொள்கை அளவில் முதல்​கட்ட ஒப்​புதலை வழங்​கியது. ஆனால், அடுத்த கட்ட செயல்​முறை மற்​றும் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், பறக்​கும் ரயில் தடத்தை மெட்ரோ ரயில் நிறு​வனத்​துடன் இணைக்க, ரயில்வே வாரி​யம் 6 வாரங்​களுக்​குள் ஒப்​புதல் அளிக்​கும் என்று கூறப்​படு​கிறது. ‘இதுகுறித்த கூட்டு முன்​மொழிவு சமீபத்​தில் வாரி​யத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இனி தாமதம் ஏதும் இருக்​காது. ஜூலை இறு​திக்​குள் ஒப்​புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என்று தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. ஒப்​புதல் கிடைத்த பிறகு, தெற்கு ரயில்வே - மாநில அரசு இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்.

இது, நிர்​வாகத்தை முழு​மை​யாக கையகப்​படுத்​த​வும், அடுத்​தடுத்த மாதங்​களில் உள்​கட்​டமைப்​பு​களில் படிப்​படி​யான மாற்​றங்​களைச் செய்​ய​வும் வழி​வகுக்​கும்.

இத்​திட்​டத்​தின் மதிப்​பீட்டு செலவு தற்​போது சுமார் ரூ.4,500 கோடி​யாக உள்ள நிலை​யில், புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாவதற்கு முன்​பாகவே அதற்​கான நிதி​யைத் திரட்​டு​வது குறித்து மாநில அரசு பல்​வேறு வழிகளை பரிசீலித்து வரு​கிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறும்​போது, “கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கும் பணி 2 மாதங்​களுக்​குள் முடிவடை​யும் என எதிர்​பார்க்​கிறோம். மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்ட பின்​னர் இந்த வழித்​தடம் அடியோடு மாற்​றப்பட உள்​ளது’’ என்​றனர்.

SCROLL FOR NEXT