தமிழகம்

ரயில்வே அப்ரன்டிஸ் நியமன தேர்வு அறிக்கையில் விதிமீறல்: தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படும் அபாயம்

மு.வேல்சங்கர்

சென்னை: தெற்கு ரயில்​வே​யில் தமிழக பகு​தி​யில் 6,171 அப்ரன்டிஸ் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான தேர்வு அறிக்​கை, வழி​காட்டு விதி​முறை​களைப் பின்​பற்​றாமல் வெளி​யிடப்​பட்​டுள்​ள​தால், தமிழக இளைஞர்​கள் பாதிப்​புக்கு உள்​ளாகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

ரயில்​வே​யில் தொழில் பழகுநர் (அப்ரன்டிஸ்) தொழிலா​ளர்​கள், ரயில்​வே​யில் உள்ள காலி​யிடங்​களில் 20 சதவீதம் இடஒதுக்​கீட்டு அடிப்​படை​யில் நிரப்​பப்​படு​வார்​கள். இவர்​கள், ரயில்​வே​யில் சீனியர் ஊழியர்​கள் மற்​றும் பொறி​யாளர்​களின் மேற்​பார்​வை​யில், வேலைகளைக் கற்​றுக்​கொள்​வார்​கள். இதற்​காக மாதந்​தோறும் ரூ.9,600 ஊதி​யம் வழங்​கப்​படு​கிறது.

இதற்​கிடையே, தெற்கு ரயில்​வே​யில் சென்​னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்​திய பணிமனை, சேலம், பெரம்​பூர் கேரஜ் மற்​றும் வேகன் ஒர்க்​ஸ், பெரம்​பூர் லோகோ ஒர்க்​ஸ், கோவை, அரக்​கோணம் பொறி​யியல் பணிமனை, போத்​தனூர் சிக்​னல் மற்​றும் தொலைத்​தொடர்பு பணிமனை உள்​ளிட தமிழகப் பகு​தி​களில் 6,171 அப்ரன்டிஸ் பணி​யிடங்​கள் நிரப்​பப்பட உள்​ளன.

இதற்கு தகு​தி​யானவர்​கள் ஆன்​லைனில் ஆக.28 முதல் செப்​.27-க்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று தெற்கு ரயில்வே சுற்​றறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. அதே​நேரம் இந்த அறி​விப்​பில், அப்ரன்டிஸ் தேர்வு வழி​காட்டு விதி​முறை​யின்​கீழ், வேலை​வாய்ப்பு அலு​வல​கத்​தில் பதிவு செய்​திருக்க வேண்​டும் என்று குறிப்​பிடப்​ப​டா​மல் உள்​ளது.

அதாவது, 2019-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை தமிழக வேலை​வாய்ப்பு அலு​வல​கங்​களில் பதிவு செய்​திருக்க வேண்​டும் என்ற ஷரத்து நீக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், கர்​நாட​கா​வின் தட்​சிண கன்​னடா பகு​தி, ஆந்​தி​ரா​வின் நெல்​லூர், சித்​தூர் பகுதி மற்​றும் கேரளா​வில் இருப்​பவர்​களும், அந்​த​மான் நிக்​கோ​பார், லட்​சத்​தீவு போன்ற பிற மாநிலங்​களில் இருப்​பவர்​களும் விண்​ணப்​பிக்​கலாம் என குறிப்​பிடப்​பட்டுள்​ளது.

இந்த புதிய அறி​விப்​பால் தென்​னிந்​திய மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​கள் திருச்சி பொன்​மலை, பெரம்​பூரில் உள்ள ரயில்வே பணிமனைக்கு அப்ரன்டிஸ் பணிக்கு விண்​ணப்​பிக்க முடி​யும். இதனால், தமிழக இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு​கள் பாதிக்​கப்​படும் நிலை ஏற்​பட்​டுள்ளது.

இதுகுறித்​து, ரயில்வே தொழிற்​சங்​கத்​தின் மூத்த தலை​வர் மனோகரன் கூறிய​தாவது: கடந்த 2002-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி​யிட்ட மனித வள திட்​ட​மிடல் மாஸ்​டர் சர்​குலர் எனப்​படும் ஒருங்கிணைந்த ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்​றும் 1984-ம் ஆண்டு மே 5-ம் தேதி​யிட்ட ஆக்ட் அப்ரன்டிஸ் தேர்வு வழி​காட்டி விதி​முறை​களின்​படி தேர்வு செய்​யப்​படும் இடங்​கள் அரு​கில் (100 கி.மீ சுற்​றளவுக்கு உட்​பட்ட) வேலை​வாய்ப்பு அலு​வல​கத்​தில் பதிவு செய்து இருப்​பவர் மட்​டுமே விண்​ணப்​பிக்க முடி​யும்.

ஆனால், இந்த விதி​கள் பின்​பற்​றப்​ப​டா​மல் ஆக்ட் அப்ரன்டிஸ் நியமனங்​களில் வடஇந்​தி​யர்​கள் தமிழகத்​தில் நுழைந்து வந்​தனர். இந்த விதி​மீறலை சுட்​டிக்​காட்​டியதை அடுத்து 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு அலு​வல​கத்​தில் பதிவு செய்து இருப்​பவர் மட்​டுமே விண்​ணப்​பிக்க முடி​யும் என விதி​கள் மாற்​றப்​பட்​டன.

இத்​தகைய சூழலில் தற்​போது அந்த விதி​களைப் பின்​பற்​றாமல் தெற்கு ரயில்வே அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது. மேலும், புவி​யியல் எல்லை எது​வும் வரையறுக்​க​வில்​லை. தற்​போது புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட புவி​யியல் எல்​லை​யால் கேரளம், ஆந்​திரா, கர்​நாடகப் பகு​தி​யினர் பொன்​மலை, பெரம்​பூர் ஐ.சி.எஃப் பணிமனை​களுக்கு விண்​ணப்​பிக்க முடி​யும். இது தவிர அந்​த​மான் நிக்​கோ​பார், லட்​சத்​தீவு​களும் இடம் பெற்​றுள்​ளன‌.

இத்​தகைய விதி​மீறல்​களால், தமிழக இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு பறி​போகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. எனவே, விண்​ணப்​பிக்க ஒரு மாதம் அவகாசம் இருப்​ப​தால், அப்ரன்டிஸ் நியமன தேர்வு அறிக்​கை​யில் உள்ள வி​தி​மீறலை சரிசெய்​து புதி​ய அறி​விப்​பு வெளி​யிட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT