தமிழகம்

காப்புரிமை வழக்கு: இளையராஜாவுக்கு ஆதரவாக ஆர்.கே.செல்வமணி சாட்சியம்

செய்திப்பிரிவு

சென்னை: ​பாடல்​களின் காப்புரிமை தொடர்​பான வழக்​கில் இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு ஆதர​வாக, இயக்​குநர் ஆர்​.கே. செல்​வ​மணி நீதி​மன்​றத்​தில் சாட்சியம் அளித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மியூசிக் மாஸ்​டர் என்ற இசை வெளி​யீட்டு நிறு​வனம் 2010-ல் வழக்கு தொடர்ந்​தது. அதில், “இளை​ய​ராஜா இசையமைத்த பாண்​டியன், குணா, தேவர் மகன், பிரம்மா உள்​ளிட்ட 109 திரைப்​படங்​களின் பாடல்​கள் மற்​றும் அந்​தப் படங்​களின் இசை வெளி​யீட்டு உரிமை​யை, இளை​ய​ராஜா​வின் மனைவி ஜீவா நடத்தி வந்த இசை நிறு​வனத்​திட​மிருந்து எங்​களது நிறு​வனம் பெற்​றுள்​ளது.

எனவே, எங்​களது அனு​ம​தி​யின்றி அந்​தப் படத்​தின் பாடல்​களை யூடியூப் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களில் யாரும் பயன்​படுத்​தக் கூடாது என்று தடை விதிக்க வேண்​டும்” என்று கோரி​யிருந்​தது.

சமூக வலைதளங்கள்... இந்த வழக்கு ஏற்​கெனவே நீதிபதி அப்​துல் குத்​தூஸ் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​த​போது, இளை​ய​ராஜா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஏ.சர​வணன், “1997-ல் செய்து கொண்ட ஒப்​பந்​தத்​தின்​போது யூடியூப், சமூக வலை​தளங்​கள் குறித்து எது​வும் குறிப்​பிடப்​பட​வில்​லை. ஆடியோ ரிலீஸுக்கு மட்​டுமே அந்​நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது” என்று வாதிட்​டார்.

இந்த வழக்​கில் இளை​ய​ராஜா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் உள்ள மாஸ்​டர் நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே ஆஜராகி சாட்​சி​யம் அளித்​துள்ள நிலை​யில், திரைப்பட இயக்​குநரும், தயாரிப்​பாள​ரு​மான ஆர்​.கே.செல்​வ​மணி மாஸ்​டர் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜராகி சாட்​சி​யம் அளித்​தார்.

ஜன. 20-க்கு தள்​ளி​வைப்பு: அப்​போது அவர், “இளை​ய​ராஜா தான் இசையமைத்​துள்ள பாடல்​களின் காப்புரிமையை என்​றும் தயாரிப்​பாளர்​களுக்கு வழங்​கியது இல்​லை. அந்​தப் பாடல்​களின் காப்புரிமை இளை​ய​ராஜா​விடம்​தான் உள்​ளது.

சம்​பந்​தப்​பட்ட படத்​தில் அந்​தப் பாடல்​களை பயன்​படுத்​து​வதற்​கான உரிமை மட்​டுமே தயாரிப்​பாளர்​களுக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது” என்று சாட்​சி​யம் அளித்​தார். அதையடுத்து நீதிப​தி, வழக்கு விசா​ரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து உத்​தரவிட்​டார்​.

SCROLL FOR NEXT