தமிழகம்

தேர்தல் நாளான ஏப்.23 பொது விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல் நடை​பெறும் ஏப்​.23-ம் தேதி பொது விடுமுறை விடப்​படு​வ​தாக தமிழக அரசு அறிவித்​துள்​ளது. சட்​டப்​பேர​வை பொதுத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது.

இதை முன்​னிட்​டு, ஏற்​கெனவே தனியார் நிறு​வனங்​கள் பணி​யாளர்​களுக்கு சம்பளத்​துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்​டும் என்று தமிழக அரசு அறி​வித்​திருந்​தது.

          

இந்​நிலை​யில் தேர்​தல் வாக்​குப்​ப​திவு நடை​பெறும் ஏப்​.23-ம் தேதி பொது விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம் வெளி​யிட்ட அரசாணை​யில், ​தேர்​தல் வாக்​குப்​ப​திவு ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. செலா​வணி முறிச்​சட்​டத்தின் படி அன்​றைய தினம் பொது விடு​முறை அறிவிக்​கப்​படு​வதாக தெரி​வித்​துள்​ளார்

SCROLL FOR NEXT