டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால்

 
தமிழகம்

போதைப் பொருள் புழக்கம் பற்றி தகவல் கொடுங்கள்: மாணவர்களுக்கு டிஜிபி மகேஷ்குமார் அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ‘‘போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்த தகவல்களைப் போலீஸாருக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். போதை கடத்துபவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்குவது உட்பட கடும் நடவடிக்கை எடுப்போம்’’ என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் எச்​சரித்​துள்​ளார்.

சென்னை வேளச்​சேரி​யில் உள்ள ஒரு தனி​யார் கல்​லூரி​யில் உலக போதைப் பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சிக்​குத் தமிழக காவல் துறை மது விலக்கு அமலாக்​கப் பிரிவு கூடு​தல் டிஜிபி சங்​கர் தலைமை தாங்​கி​னார். நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பேசி​ய​தாவது:

கஞ்​சா, செயற்கை போதைப் பொருள்​கள் தமிழகத்​தில் தயாரிக்கப்​படு​வ​தில்​லை. அவை பிற மாநிலங்​களில் இருந்து கடத்தி வரப்​படு​கின்​றன. நாட்​டின் செல்​வ​மாக இருக்​கும் மாணவர்​கள், கஞ்சா மற்​றும் செயற்கை போதைப் பொருள்களுக்கு இரை​யாக வேண்​டாம். சமூக ஊடகங்​கள், போதைப் பொருள் ஆகிய இரண்டு விஷங்​களுக்கு இன்​றைய இளைஞர்​கள் அடிமை​யாகின்​றனர்.

போதைப் பொருட்​களைப் பயன்​படுத்​தி​னால், மாணவர்​களின் கல்வி பாதிப்​பதுடன் குடும்ப வாழ்க்​கை​யும் பாழாகி​விடும். எதிர்​கால கனவு சிதைந்து விடும். நட்பு வட்​டத்​தில் மாணவர்​கள் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். தேர்​வு, வேலை உள்​ளிட்ட சில விஷ​யங்​களால் மன அழுத்​தத்​தில் சிக்​கும் இளைஞர்​கள், போதையின் பக்​கம் செல்ல வேண்​டாம். மாறாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட விளை​யாட்​டு, யோகா, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்தி தங்​களது திறனையும் வளர்த்துக் கொள்​ளலாம்.

விளை​யாட்​டு வேண்டாம்

சிலர் விளை​யாட்​டாக​வும், சிலர் உள்​நோக்​கத்​துடன் போதைப் பொருளைப் பயன்​படுத்​து​மாறு இளைஞர்​களிட​மும் மாணவர்​களிட​மும் பரிந்​துரை செய்​கின்​றனர். அவர்​களிடம் இளைஞர்​கள், போதைப் பொருள் எனக்கு வேண்​டாம், நமக்கு வேண்​டாம் என்று உறு​தி​யாக கூறுங்​கள். போதைப் பொருள்​களை விற்​பவர்​கள், மாணவர்​களை குறி வைத்​து, அவர்​கள் முன்​னேற்​றப் பாதை​யில் செல்ல விடா​மல் தடுக்​கின்​றனர். மேலும் இப்​படிப்​பட்ட நபர்​களை, இளைஞர்​களும், மாணவர்​களும் நிராகரிக்க வேண்​டும்.

எதிர்காலம் மோசமாகும்

அறி​யாமை​யால் இளைஞர்​கள் போதைப் பொருளைப் பயன்​படுத்​தி​னால், அவர்​களது எதிர்​காலம் மோச​மான​தாகி​விடும். மேலும் அவர்​கள் கடுமை​யான விளைவு​களைச் சந்​திக்​க​வும் நேரிடும். நமது மாநிலம், கல்வி மற்​றும் தொழில் துறை​யில் சிறந்து விளங்​கும் வேளை​யில், இளைஞர்​களிடையே போதைப் பழக்​கம் அதி​கரிப்​பது பொருளா​தார வளர்ச்​சிப் பாதை​யில் ஒரு கேள்விக்​குறியை உரு​வாக்கி விடும். போதைப் பொருட்​களைத் தடுப்​ப​தில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இவ்​வாறு டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் பேசி​னார்

முன்​ன​தாக நிகழ்ச்​சி​யில் மாணவர்​களு​டன் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் கலந்​துரை​யாடி​னார். அப்​போது, ‘‘தமிழகத்​தில் பல இடங்​களில் போதைப் பொருட்​கள் நடமாட்​டம் சர்வ சாதாரணமாக உள்​ளது. அதை காவல் துறை​யால் முற்​றி​லும் தடுக்க முடி​யு​மா?’’ என்று மாணவர்​கள் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதில் அளித்த டிஜிபி மகேஷ்குமார் கூறிய​தாவது: போதைப் பொருள்​களை ஒழிப்​ப​தில் மாணவர்​களும் பங்​கேற்க வேண்​டும். எங்​கெல்​லாம் போதை நடமாட்​டம் உள்​ளது என்​பது குறித்த தகவல்​களைத் தைரிய​மாக போலீஸுக்​குத் தகவல் கொடுங்​கள். நாங்​கள் கடும் நடவடிக்கை எடுக்​கிறோம்.

போதைப் பொருள் விற்​பனை மற்​றும் கடத்​தலில் ஈடு​படு​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​களு​டைய வங்கி கணக்​கு​கள் மற்​றும் சொத்​துகளை முடக்​கும் நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும். போதைப் பொருள் இல்​லாத தமிழகத்தை உரு​வாக்க அரசு மற்​றும் காவல் துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்​கொண்​டு வரு​கிறது. இவ்​வாறு டிஜிபி மகேஷ் குமார்​ அகர்​வால்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT