பர்கூரில் இருந்த பழைய ரயில் நிலையம். (கோப்பு படம்)

 
தமிழகம்

திருப்பத்தூர்-ஓசூர் இடையே 109 கி.மீ. தொலைவுக்கு ரூ.3,911 கோடியில் ரயில் பாதை அமைக்க திட்ட அறிக்கை

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ​திருப்​பத்​தூர்​-ஓசூர் இடையே 109 கி.மீ. தொலை​வுக்கு ரயில் பாதை அமைக்க ரூ.3,911 கோடி​யில் திட்ட அறிக்கை தயார் செய்​யப்​ பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

1905-ல் திருப்​பத்​தூரிலிருந்து பர்​கூர் மார்க்​க​மாக கிருஷ்ணகிரி வரை ரயில் போக்​கு​வரத்து சேவை தொடங்​கப்​பட்​டு, 1936 வரை ரயில்கள் இயக்​கப்​பட்​டன. போதிய வரு​வாய் இல்லை என்​ப​தால் 1942-ல் இந்த வழித்​தடத்​தில் ரயில்கள் இயக்​கம் நிறுத்​தப்​பட்​டது.

          

இந்​நிலை​யில், கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை அமைத்​து, ரயில்களை மீண்​டும் இயக்க வேண்​டும் என்று பல ஆண்​டு​களாக பல்​வேறு தரப்​பினரும் கோரிக்கை விடுத்து வந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த திட்​டத்தை செயல்​படுத்த திட்ட அறிக்கை தயார் செய்​திருப்​ப​தாக, கிருஷ்ணகிரி​யில் அண்​மை​யில் நடை​பெற்ற அரசு அலு​வலர்​கள், தொழில்​முனை​வோர் கலந்து கொண்ட கூட்​டத்​தில் ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அதன்​படி, ரூ.3,910.68 கோடி​யில் இத்​திட்​டத்தை செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டு, வரை​படத்​துடன் கூடிய திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்​டுள்​ளது.

திருப்​பத்​தூரிலிருந்து ஓசூர் வரை 109.24 கி.மீ. தொலை​வுக்கு ரயில் வழித்​தடம் அமைத்​து, இப்​பாதை​யில் 130 கி.மீ. வேகம் வரை ரயில்கள் இயக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும், திருப்​பத்​தூர் மாவட்​டம் கந்​திலி, கிருஷ்ணகிரி மாவட்​டம் பர்​கூர், கிருஷ்ணகிரி, போலுப்​பள்​ளி, சின்​னார், சூளகிரி ஆகிய இடங்​களில் ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்பட உள்​ளன.

இந்த திட்​டத்​துக்​காக திருப்​பத்​தூர் மாவட்​டத்​தில் 64.435 ஏக்​கர், கிருஷ்ணகிரி மாவட்​டத்​தில் 335.69 ஏக்​கர் நிலங்​கள் கையகப்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

வரும் ரயில்வே பட்​ஜெட்​டில் இத்​திட்​டத்​துக்கு நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, விரை​வில் பணி தொடங்​கப்​படும் என்று அந்​தக் கூட்​டத்​தில் ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

SCROLL FOR NEXT