தமிழகம்

டிச.9 முதல் 14-ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

செய்திப்பிரிவு

திருச்சி: தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறியதாவது: தமிழகம் கடந்து அரபிக்​கடல் சென்ற தாழ்​வுப் பகுதியும், காற்று சுழற்​சி​யும் ஒன்​றிணைந்து லட்​சத்​தீவுக்கு தெற்குப் பகு​தி​யில் நீடிக்​கிறது.

புதி​தாக குமரிக்​கடல் நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி காரண​மாக தற்போது டெல்டா மாவட்​டங்​கள், தென் மாவட்​டங்​கள், மேற்​குத் தொடர்ச்சி மலைப் பகு​தி​களில் மித​மானது முதல் சற்று கனமழை வரை பொழிந்துவரு​கிறது.

அரபிக்​கடல் தாழ்வு சுழற்சி கிழக்கு காற்றை ஈர்ப்​ப​தன் காரண​மாக வால்​பாறை முதல் கன்​னி​யாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகு​தி​களி​லும், திண்​டுக்​கல், திருப்​பூர் மற்​றும் தென் மாவட்​டங்​களின் மேற்​குப் பகு​தி​களி​லும் நல்ல மழைப்​பொழிவு உண்​டு. இதேநிலை வரும் 8-ம் தேதி வரை தொடரும்.

மலேசி​யா, தாய்​லாந்து கடந்து வங்​கக் கடலில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் தாழ்வு நிலை வரும் 9 முதல் 14-ம் தேதி வரை இலங்​கை, குமரிக்​கடல், தென் தமிழகம் வழி​யாக அரபிக்​கடல் நோக்கி நகர்ந்​து, செங்​கல்​பட்டு முதல் கன்​னி​யாகுமரி வரை அனைத்து கடலோர மாவட்​டங்​கள், டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களின் உள்​பகு​தி​களில் மித​மானது முதல் சற்று கனமழை வரை கொடுக்கும். ஓரிரு இடங்​களில் அதி கனமழைக்​கும் வாய்ப்​புள்​ளது. இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT