ஊட்டி அருகே தோடரின மக்களின் வசிப்பிடமான முத்தநாடு மந்தில் உள்ள கோயிலில் வழிபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

 
தமிழகம்

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்: பிரேமலதா நம்பிக்கை

செய்திப்பிரிவு

ஊட்டி: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேமுதிக இடம் பெறும் கூட்​ட​ணியே வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் கூறி​னார்.

நீல​கிரி மாவட்​டம் குன்​னூரில் நடை​பெற்ற தேமு​திக பொதுக் கூட்​டத்​தில் கலந்து கொள்​வதற்​காக நேற்று முன்​தினம் வந்த பிரேமலதா விஜய​காந்த், தேயிலைத் தோட்​டங்​களுக்​குச் சென்று தொழிலா​ளர்​களு​டன் இணைந்து தேயிலை பறித்​தார்.

நேற்று ஊட்​டிக்கு வந்த அவர் அங்​குள்ள சாக்​லேட் தொழிற்​சாலைக்​குச் சென்​று, சாக்​லேட் தயாரிக்​கும் பணி​களை பார்​வை​யிட்​டார். தொடர்ந்​து, முத்​த​நாடுமந்து தோடர் கிராமத்​துக்​குச் சென்​று, தோடர் பழங்​குடி​யின மக்​களின் கோயிலைப் பார்​வை​யிட்​டார்.

பசுந்தேயிலைக்கு விலை... பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பசுந் தேயிலைக்கு சரி​யான விலை கிடைக்​காத​தால் நீல​கிரி மாவட்ட விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தப் பிரச்​சினைக்கு மத்​திய, மாநில அரசுகள் உரிய தீர்​வு​காண வேண்​டும். நீல​கிரி​யில் பலருக்​கும் பட்டா இல்​லை. பல இடங்​களில் சாலைகள் குண்​டும், குழி​யு​மாக உள்​ளன.

ஊட்​டி​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் நில​வு​கிறது. லட்​சக்​கணக்​கான சுற்​றுலாப் பயணி​கள் நீல​கிரிக்கு வரு​வ​தால் ரூ.3 ஆயிரம் கோடி வர்த்​தகம் நடை​பெறுகிறது. எனவே, சுற்​றுலாவை மேம்​படுத்​தத் தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக மக்​கள் அரசி​யல் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வார்​கள். அந்த தேர்​தலில் தேமு​திக இடம்​பெறும் கூட்​ட​ணியே வெற்றி பெறும். விஜய​காந்த் அளவுக்​கு, அரசி​யலில் விஜய் பிர​காசிப்​பாரா என்​பது குறித்து இப்​போது கூற முடி​யாது. இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT