விருத்தாசலத்தில் சாலையோர வியாபாரிகளிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வாக்கு சேகரித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நேற்று தனது பிரச்சாரத்தை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் முன்பு நிறைவு செய்தார்.
அப்போது பேசிய பிரேமலதா, “விருத்தகிரீஸ்வரர் அருளால் இத்தொகுதியில் நான் வெற்றி பெறுவேன்.திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். நான் வெற்றி பெற்றதும் ஒவ்வொரு கிராமத்திலும் வீதி வீதியாக சென்று மக்களைச் சந்திந்து நன்றி கூறுவேன். கேப்டன் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்வேன்.
‘விருத்தாசலத்தை மாவட்டமாக்க வேண்டும் ’ என்பது இத்தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
நான் விருத்தாசலத்தில் வீடு வாங்கி இங்கே தங்கி, விருத்தாசலத்தின் மகளாக இருப்பேன். தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக விருத்தாசலத்தை மாற்றிக் காட்டுவேன்.
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தவுடன் பல்வேறு விமர்சனங்கள் மூலம் திமுக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கலாம், குழப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்க்கூட்டணில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். விசிக தலைவர் திருமாவளவன் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவற்றையெல்லாம் சரி செய்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.