கோப்புப் படம்

 
தமிழகம்

“திமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்டேனா?” - பிரேமலதா பரபரப்பு தகவல்

செய்திப்பிரிவு

சமீப​கால​மாக திமுக கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு துணை முதல்​வர் பதவி வேண்​டும் என அக்​கட்சி பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கேட்​ட​தாக​வும், அதை கொடுக்க திமுக முன்​வ​ரா​த​தால்​தான் கூட்​டணி ஒப்​பந்​தத்​தின் போதும் பிரேமலதா வரவில்லை என தகவல் பரப்​பப்​பட்டு வந்​தது. அதுகுறித்து பிரேமலதா நேற்று விளக்​கம் அளித்​திருக்​கி​றார்.

திமுக கூட்​ட​ணி​யில் தேமு​திக சார்​பில் பொருளாளர் எல்​.கே.சுதீஷ் மாநிலங்​கள​வைத் தேர்​தலுக்​கான வேட்​புமனு​வைத் தாக்​கல் நேற்று செய்​தார். இது தொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கூறிய​தாவது: மாநிலங்​களவை உறுப்​பினர் பதவிக்​கான வேட்​புமனுவை தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ் தாக்​கல் செய்​துள்​ளார். இந்த வாய்ப்பு பல ஆண்​டு​களுக்கு முன்பே கிடைத்​திருக்க வேண்​டியது.

          

கால​தாமத​மாக 2026-ல்​தான் சாத்​தி​ய​மாகி​யுள்​ளது. கடந்த காலங்​களில் அதி​முக உள்​ளிட்ட பல கூட்​ட​ணி​களில் தேமு​திக போட்​டி​யிட்​டிருந்​தா​லும், நாடாளு​மன்ற உறுப்​பினர் பதவி கைக்கு எட்​டா​மலேயே இருந்​தது. தற்​போது 2026-ல் திமுக கூட்​ட​ணி​யில் இந்த வாய்ப்பு கிடைத்​துள்​ளதை தேமு​திக தொண்​டர்​கள் ஒரு பெரும் வெற்​றிக் கொண்​டாட்​ட​மாகப் பார்க்​கின்​ற​னர்.

இது​வரை தமிழக சட்​டப்​பேர​வை​யில் மக்​கள் பணி​யாற்​றிய கட்​சி, முதல்​முறை​யாகப் பொருளாளர் சுதீஷ் மூலம் இந்​திய அளவில் நாடாளு​மன்​றத்​தில் ஜனநாயகக் கடமை​யாற்ற உள்​ளது. இந்த தேர்​தல் நடவடிக்​கை​கள் முடிவடைந்த பிறகு, வரும் 16-ம் தேதி முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன. அதனைத் தொடர்ந்​து, சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொகு​திப் பங்​கீடு குறித்​துப் பேச கூட்​ட​ணிக் கட்​சிகள் சார்​பில் குழுக்​கள் அமைக்​கப்​படும்.

திமுக தலை​மையி​லான இந்​தக் கூட்​ட​ணி​யில், முதல்​வர் ஸ்டா​லின் அறிவிக்​கும் தேதி​யில் தேமு​திக சார்​பில் அமைக்​கப்​பட்ட குழு சென்று பேச்​சு​வார்த்தை நடத்​தும். எந்​தெந்த தொகு​தி​கள் யாருக்கு என்​ப​தைப் பேசி இறுதி செய்து முதல்​வர் முறைப்​படி அறி​விப்​பார்.

தேமு​தி​க-​வின் வாக்கு சதவீதம் குறித்து விமர்​சிப்​பவர்​கள், தேமு​திக யாரால் ஆரம்​பிக்​கப்​பட்​டது, அதன் கட்​டமைப்பு என்ன என்​ப​தைத் தெரிந்து பேச வேண்​டும். காழ்​புணர்ச்​சி​யால் சொல்​லப்​படும் பொது​வான விமர்​சனங்​களுக்​குப் பதில் சொல்ல வேண்​டிய அவசி​யம் எங்​களுக்கு இல்​லை. திமுக-​விடம் துணை முதல்​வர் பதவி கேட்​ட​தாக வெளி​யான தகவல் உண்​மையல்ல. நாங்​கள் இது வேண்​டும், அது வேண்​டும் என்று யாரிட​மும் அடம் பிடித்​தது கிடை​யாது. மற்ற கட்​சிகள் தங்​கள் உரிமை​யைக் கேட்​பது போல, எங்​களுக்​கான உரிய இடத்தை நாங்​கள் கேட்​டிருக்​கி​றோம்.

அது நிச்​சய​மாக அமை​யும். விஜய பிர​பாகரன் உள்​ளிட்​டோர் எந்​தத் தொகு​தி​யில் போட்​டி​யிடு​வார்​கள் என்​பது குறித்​துத் தலைமை உரிய நேரத்​தில் அறிவிக்​கும். சுதீஷ் கட்​சி​யின் தொடக்​கக் காலத்​தி​லிருந்தே உழைத்து வருபவர். அவருக்​குப் பதவி பெற அனைத்து தகு​தி​யும் உரிமை​யும் உள்​ளது. திமுக-​வின் தேர்​தல் அறிக்கை வந்த பிறகு, தேமு​திக தனது கருத்​துக்​களை முன்​வைக்​கும். குறிப்​பாகப் பெண்​கள், குழந்​தைகள், கல்வி மற்​றும் மருத்​து​வத்​திற்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படும்.

இது தமி​ழ​கத்​திற்​கும் டெல்​லிக்​கு​மான தேர்​தல் என்று முதல்​வர் கூறு​வது​போல, இந்​தியா கூட்​ட​ணிக்​கும் என்​டிஏ கூட்​ட​ணிக்​கு​மான இந்​தப் போரில் தேமு​திக மகத்​தான வெற்றி பெற்​று, திமுக கூட்​டணி 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களைக் கைப்​பற்​றும்.இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT