தமிழகம்

பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு

5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: வடகிழக்கு பருவ மழையை எதிர்​கொள்​வதற்​காகச் சென்னை மாநக​ராட்​சி​யில் மண்​டல​வாரி​யாகப் பொறுப்பு அமைச்​சர்​கள், கண்​காணிப்பு அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சென்​னை, கடலூர் உட்பட 5 மாவட்​டங்​களில் நீர்​நிலை​களைத் தூர் வார ரூ.42 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

வடகிழக்கு பருவ மழைக் காலங்​களில் நிவாரணப் பணி​களை விரைவுபடுத்​த​வும், அலு​வலர்​களை ஒருங்​கிணைக்​க​வும், சென்னை மாநக​ராட்​சி​யில் மண்​டல​வாரி​யாக 7 பொறுப்பு அமைச்​சர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி அமைச்​சர்​கள் ரமேஷ் (திரு​வொற்​றியூர், மணலி), லோகேஷ் தமிழ்ச்​செல்​வன் (மாதவரம், தண்​டை​யார்​பேட்​டை), அருண்​ராஜ் (ராயபுரம், திருவிக நகர்), விஜய் பாலாஜி (அம்​பத்​தூர், அண்ணா நகர், தேனாம்​பேட்​டை), விஜய் தமி​ழன் பார்த்​திபன் (ஆலந்​தூர், அடை​யாறு), பிரபு (கோடம்​பாக்​கம், வளசர​வாக்​கம்), விக்​னேஷ் (பெருங்​குடி, சோழிங்க​நல்​லூர்) ஆகி​யோர் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட மண்​டலங்​களில் முகாமிட்டு நிவாரணப் பணி​களைத் துரிதப்​படுத்​து​வார்​கள். மேலும், சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா இந்​தப் பணி​களை ஒருங்​கிணைப்​பார்.

இதே​போல், அமைச்​சர்​களு​டன் இணைந்து நிர்​வாக ரீதி​யான நடவடிக்​கை​களை மேற்​கொள்ள 15 மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் கண்​காணிப்பு அலு​வலர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி பாலசுப்​ரமணி​யம் (திரு​வொற்​றியூர்), குமர​வேல் பாண்​டியன் (மணலி), அருண்​ராஜ் (மாதவரம்), கண்​ணன் (தண்​டை​யார்​பேட்​டை), ஆஷா அஜித் (ராயபுரம்), கணேசன் (திருவிக நகர்), காயத்ரி கிருஷ்ணன் (அண்ணா நகர்), விவே​கானந்​தன் (அம்​பத்​தூர்), கிறிஸ்​து​ராஜ் (தே​னாம்​பேட்​டை), கோபால சுந்​தர​ராஜ் (கோடம்​பாக்​கம்), விஜய ராணி (வளசர​வாக்​கம்), வாஹே சங்​கேத் பல்​வந்த் (ஆலந்​தூர், செந்​தில் ராஜ் (அடை​யாறு), மகேஸ்​வரி (பெருங்​குடி), பாஸ்கர பாண்​டியன் (சோழிங்​கநல்​லூர்) ஆகி​யோர் சென்னை மாநக​ராட்சி ஆணை​யருடன் சேர்ந்து செயல்​படு​வார்​கள்.

இந்​தக் கண்​காணிப்பு அலு​வலர்​கள், பருவ மழைக் காலங்​களில் தண்​ணீர் தேங்​கும் தாழ்​வான பகு​தி​களைக் கண்​டறிதல், நிவாரண முகாம்​களைத் தயார் நிலை​யில் வைத்​தல், ஜேசிபி இயந்​திரங்​கள், மோட்​டார்​கள் மற்​றும் படகு​களைத் தயார் செய்​தல், மருத்​துவ முகாம்​களை அமைத்​தல், போக்​கு​வரத்து நெரிசலைச் சரி செய்​தல் மற்​றும் தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்​தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்​வாறு அறிவிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

202 தூர் வாரும் பணி

சென்​னை, கடலூர் உட்பட 5 மாவட்​டங்​களில் உள்ள நீர்​நிலை​களைப் பருவ மழைக்கு முன்​பாகவே சீரமைக்க வேண்​டும் என்று நீர்​வளத் துறை உத்​தர​விட்​டுள்​ளது. இதற்​காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கி அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி பாலாறு வடிநில வட்​டத்​தில் சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் ஆகிய மாவட்​டங்​களில் 169 பணி​களுக்​காக ரூ.39 கோடி​யும், வெள்​ளாறு வடிநில வட்​டத்​தில் கடலூரில் 33 பணி​களுக்​காக ரூ.3 கோடி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

கூவம் ஆறு, அடை​யாறு, கொசஸ்​தலை ஆறு ஆரணி ஆறு ஆகிய ஆறுகள் மற்​றும் செம்​பரம்​பாக்​கம், போரூர் உள்​ளிட்ட ஏரி​களின் உபரிநீர் செல்​லும் கால்​வாய்​கள் என மொத்​தம் 202 இடங்​களில் தூர் வாரும் பணி​கள் முழு வீச்​சில் நடை​பெற உள்​ளன. ஆகா​யத் தாமரைகளை அகற்​று​தல், மதகு​களைச் சீரமைத்​தல் மற்​றும் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​தல் போன்ற பணி​கள் மாவட்ட ஆட்​சி​யர்​களின் நேரடி கண்​காணிப்​பில் நடை​பெறும் என்று தெரிவி​க்​கப்​பட்​டுள்​ளது.

மேட்டூர் அணை செப்.1 திறப்பு

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேட்டூர் அணையில் 2026 - 27 பாசன ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்குரிய நீர் 41.223 டிஎம்சி மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டிஎம்சியைப் பராமரிக்க வேண்டியதாலும், டெல்டா பாசனத்துக்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. எனினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் தொடர்ந்து வழங்கப்பட்டது.

மேலும், தமிழத்துக்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காகத் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு, அதன் விளைவாக பில்லிகுண்டுலுவில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 3,500 கன அடி, 9,000 கன அடி மற்றும் 12,000 கன அடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உத்தரவிட்டுள்ளன.

இதற்கிடையே, மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், நீர்வரத்து மற்றும் வடகிழக்கு பருவ மழையையும் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசன தேவைகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து செப்.1-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.

இதையொட்டி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, நிலங்களை உழுது தயார் செய்தல், நாற்றங்கால் அமைத்தல், விதைப்பு மேற்கொள்ளுதல், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களைப் போதிய அளவில் இருப்பில் வைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். குறுகிய கால மற்றும் நடுத்தர கால நெல் ரகங்கள் உள்ளிட்ட பொருத்தமான பயிர் ரகங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT