தமிழகம்

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன்ஜாமீன் மனு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய்க்​கு, தவெக பெண் தொண்​டர்​கள் அளித்த ஆதரவு குறித்து யூடியூப் சேனல் ஒன்​றுக்கு பேட்​டியளித்த அரசி​யல் விமர்​சகரும், முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​கலாமின் அறி​வியல் ஆலோ​சகரு​மான பொன்​ராஜ், அவர்​கள் குறித்து இழி​வாகப் பேசி​ய​தாக சர்ச்சை எழுந்​தது.

இது தொடர்​பாக தவெக தலை​வரும், தற்​போதைய தமிழக முதல்​வரு​மான விஜய் தேர்​தலுக்கு முன்​பாக டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேரில் சென்று பொன்​ராஜுக்கு எதி​ராக புகார் அளித்​தார்.

மேலும் தவெக நிர்​வாகி​கள் சென்னை மாநகர காவல் ஆணை​யரிடம் புகார் அளித்​தனர். கடலூர் தவெக மாவட்​டச் செய​லா​ள​ரும், தற்​போதைய கடலூர் எம்​எல்​ஏ-வு​மான பி.​ராஜ்கு​மார் கடலூர் புதுநகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​திருந்​தார்.

தேர்​தலுக்கு முன்​பாக அளிக்​கப்​பட்ட இந்த புகார்​களின் அடிப்​படை​யில், பொன்​ராஜுவுக்கு எதி​ராக சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸாரும், கடலூர் புதுநகர் போலீ​ஸாரும் குற்ற வழக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கு​களில் தனக்கு முன்​ஜாமீன் கோரி பொன்​ராஜ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​துள்​ளார். அதில் தன் மீதான குற்​றச்​சாட்​டு​கள் பொய்​யானவை என்​றும், அரசி​யல் காழ்ப்​புணர்ச்சி காரண​மாக திரித்து கூறப்​பட்​டுள்​ளது என்​றும், அதி​கார துஷ்பிரயோகம் செய்து அரசி​யல் ரீதி​யாக கருத்து மற்​றும் பேச்​சுரிமையை முடக்​கும் வகை​யில் தனக்கு எதி​ராக வழக்​கு​கள் பதி​யப்​பட்​டுள்​ளது என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்த மனு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

SCROLL FOR NEXT