தமிழகம்

“எல்லா விஷயங்களையும் இப்போதே போட்டு உடைக்க முடியாது” - கூட்டணி ஆட்சி பற்றி பொன்னார் பூடகம்

செய்திப்பிரிவு

தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைக்​கும் என்று பாஜக தொடர்ந்து சொல்​லிவ​ரும் நிலை​யில் இதுபற்றி தேர்​தல் முடிந்த பிறகு அதி​முக​விடம் பேசவேண்​டிய விஷ​யம் அது என்று முன்​னாள் மத்​திய அமைச்​சரும் பாஜக மூத்த தலை​வ​ரு​மான பொன். ராதாகிருஷ்ணன் கூறி​யுள்​ளார். மேலும், அதி​காரத்​தில் பங்கு கேட்​பது தொடர்​பான எல்லா விஷ​யங்​களை​யும் இப்​போதே போட்டு உடைக்க வேண்​டும் என்று அவசி​யமில்லை என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

மதுரை​யில் பிரதமர் மோடி பங்​கேற்​கும் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நடை​பெறும் இடத்தை முன்​னாள் மத்​திய அமைச்​சர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன் நேற்று பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மது​ராந்​தகத்​தில் நடை​பெற்ற முதல் தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் தமிழக அரசி​யலில் மிகப்​பெரிய அதிர்​வலையை ஏற்​படுத்​தி​யது. அடுத்த பிரச்​சார பொதுக்​கூட்​டம் மதுரை​யில் நடை​பெறுகிறது.

          

இதற்​கான ஏற்​பாடு​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. தமிழக மக்​கள் தேர்​தலை எதிர்​நோக்கி காத்​திருக்​கின்​ற​னர். தேர்​தலுக்கு இன்​னும் நாள் இருக்​கிறது. எல்லா கட்​சிகளும் கூட்​ட​ணியை முடிவு செய்​து​விட்​டது என்று சொல்ல முடி​யாது. திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் பல ஆண்​டு​களாக ஒரே கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும் இன்​னும் கூட்​ட​ணியை உறு​திப்​படுத்த முடிய​வில்​லை.

தேசிய ஜனநாயக கூட்​டணி சரி​யான நேரத்​தில் வலுப்​பெற்று வரும். தேசிய ஜனநாயக் கூட்​ட​ணிக் கட்​சி​களின் தேர்​தல் அறிக்கை தமிழக மக்​களின் விருப்​பத்​துக்​கும் எதிர்​பார்ப்​புக்​கும் ஏற்​றது போல இருக்​கும். மதுரை பொதுக்​கூட்​டத்​துக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு புதிய கட்​சிகள் வரு​மா, வரா​தா? என்​பதை இப்​போது சொல்ல முடி​யாது. எது வேண்​டு​மா​னாலும் நடக்​கலாம்.

ஆட்​சி​யில் பங்கு கேட்​பது திமுக, காங்​கிரஸ் பிரச்​சினை. கருணாநிதி ஏற்​கெனவே கூடா நட்பு கேடில் முடி​யும் என்று கூறி​யுள்​ளார். இது எப்​போதும் பொய்த்​தது இல்​லை. திமுக-​காங்​கிரஸ் கூட்​டணி ஏற்​படும் போதெல்​லாம் தமி​ழர்​கள் தலை​குனி​யும் நிகழ்​வு​களும், பாதிப்​பு​களும் ஏற்​பட்​டுள்​ளன. பாமக பூசல் பற்றி பேச வேண்​டிய​தில்​லை. அன்​புமணி தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் உள்​ளார். கூட்​டணி வெற்​றிக்​காக அவர் உழைக்​கி​றார். அதை மட்​டும் பார்த்​தால் போதும். அதி​முக​விடம் அதி​காரத்​தில் பங்கு கேட்​பது தொடர்​பான எல்லா விஷ​யங்​களை​யும் இப்​போதே போட்டு உடைக்க வேண்​டும் என்று அவசி​யமில்​லை.

நாட்​கள் உள்​ளன. தேர்​தலில் வெற்றி பெற்ற பிறகு பேச வேண்​டிய விஷ​யம் அது. தேர்​தல் முடிவு​கள் முதல்​வர் விரும்​புவது போல் இருக்​காது. திமுக தனித்​தும் ஆட்​சிக்கு வர முடி​யாது. கூட்​ட​ணி​யாக சேர்ந்​தும் ஆட்​சிக்கு வர முடி​யாது. எந்த இன்​ஜின் எப்​படி என்​பது இன்​னும் ஒரு மாதத்​தில் தெரிந்து விடும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT