தென்காசியில் நடைபெற்ற ஆன்மிக விழாவில் பேசினார் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்.

 
தமிழகம்

திமுக ஆட்சியில் 11 ஆதீனங்களை இல்லாமல் செய்துவிட்டனர்: பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தென்காசி: ​திமுக ஆட்​சி​யில் 11 ஆதீனங்​களை இல்​லாமல் ஆக்​கி​விட்​டனர். 56 ஆதீனங்​கள் இருந்த நிலை​யில் தற்​போது 45 ஆதீனங்​கள் மட்​டுமே உள்ளன என்று முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல் கூறி​னார்.

தென்​காசி​யில் ‘ஆல​யம் காக்க ஆன்​மிக ஒருங்​கிணைப்​பு’ விழா முன்​னாள் ஐஜி பொன் மாணிக்​கவேல் தலை​மை​யில் நடை​பெற்​றது. விழாவை செண்​பக​ராம கணேசன் தொடங்​கி​வைத்​தார்.

          

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யன், தென்​பாரத திருக்​கோ​யில் அமைப்​பாளர் சரவண கார்த்​திக், மாநிலச் செய​லா​ளர் குற்​றால​நாதன் மற்​றும் மடா​திப​தி​கள், சிவாச்​சா​ரி​யார்​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

இந்​தக் கூட்​டத்​தில், “கோ​யில்​கள் மீதான நிர்​வாக வரியை குறைக்க வேண்​டும். ஆடிட் வரியை ரத்து செய்ய வேண்​டும். தான் முதல்​வ​ரா​னால் கோயில் இடத்​தில் உள்ள ஆக்​கிரமிப்பு வீடு​களுக்கு பட்டா வழங்​கு​வ​தாக பழனி​சாமி அறி​வித்​துள்​ளார். அந்த அறி​விப்பை திரும்​பப் பெறா​விட்​டால், தேர்​தலில் அவருக்கு அளிக்​கும் ஆதரவு மறு பரிசீலனை செய்​யப்​படும்.

கோசாலை அமைக்க வேண்டும்: கால​மான அரசி​யல்​வா​தி​களின் பிறந்த நாளில் கோயில்​களில் சிறப்பு பூஜை, சிறப்பு விருந்து அளிப்​பதை ரத்து செய்ய வேண்​டும். கோயில் நிலங்​களில் அரசு கட்​டிடங்​கள் இருந்​தால், அவற்றை அப்​புறப்​படுத்​தி, நிலத்தை கோயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்க வேண்​டும். கோயில்​களில் அபிஷேகத்​துக்கு நாட்டு மாட்​டுப் பாலை மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும். இதற்​காக கோயில்​களில் கோசாலை அமைக்க அரசாணை பிறப்​பிக்க வேண்​டும்.

அர்ச்​சகர்​களுக்கு குறைந்​த​பட்ச ஊதி​ய​மாக நாளொன்​றுக்கு ரூ.900 வழங்க வேண்​டும். 700 ஆண்​டு​களுக்கு மேல் தொன்மை வாய்ந்த கோயில்​களில் உள்ள அர்ச்​சகர்​களுக்கு ரூ.1,500 சம்​பளம் வழங்க வேண்​டும்” என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகள் வலி​யுறுத்​தப்​பட்​டன.

கூட்​டத்​தைத் தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் பொன் மாணிக்​கவேல் கூறிய​தாவது: திமுக ஆட்​சி​யில் 11 ஆதீனங்​களை இல்​லாமல் போகச் செய்​து​விட்​டனர். முன்பு 56 ஆதினங்​கள் இருந்த நிலை​யில், இப்​போது 45 ஆதினங்​கள்​தான் உள்​ளன.

கோயில் நிலங்​களின் வரு​வாயைப் பெருக்​கு​வது​தான் கோயில் செயல் அலு​வலரின் வேலை. கோயில் கரு​வறை​யில் சென்று வேலை​பார்க்க அறநிலை​யத் துறை​யினருக்கு உரிமை இல்​லை. இதை தட்​டிக் கேட்க ஆட்​கள் கிடை​யாது.

கோயிலுக்கு வெளி​யில்​தான் செயல் அலு​வலர் அலு​வல​கம் இருக்க வேண்​டும். கோயிலுக்​குள் செயல் அலு​வலர் அலு​வல​கம் வைத்​திருப்​ப​தற்​கு, ஏன் வாடகை கொடுக்​க​வில்​லை? கோயில்​களுக்கு வரி விதிக்​கப்​படு​வதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்து வாதாட, சரி​யான வழக்​கறிஞர்​கள் இல்​லை.

சில ஜாதிக் கட்​சிகள் என்ன குற்​றம் செய்​தா​லும், அதி​காரத்​துக்கு அரு​கில் இருப்​ப​தால், அவர்​களை ஒன்​றும் செய்ய முடிய​வில்​லை. இந்​துக்​களிடம் ஒற்​றுமை இல்​லை. இவ்​வாறு பொன் மாணிக்​கவேல் கூறி​னார்.

SCROLL FOR NEXT