தமிழகம்

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பும், எதிர்ப்பும்

செய்திப்பிரிவு

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்​டம் ரத்து செய்​வ​தாக தமிழக அரசு அறி​வித்​துள்​ளதற்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வரவேற்​பும், எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: தமிழ்​நாட்​டின் வளர்ச்​சிக்​கான பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை ரத்து செய்​திருக்​கும் தவெக அரசை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன்.

பெருகி வரும் விமானப் பயணி​களின் எண்​ணிக்கை மற்​றும் விமான சரக்கு போக்​கு​வரத்​து, எதிர்​காலத் தேவை போன்​றவற்​றின் அடிப்​படை​யில், சென்​னைக்கு 2-வது விமான நிலை​யம் அவசி​யம் என்​பதை உணர்ந்​து, பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டம் திமுக அரசால் உரு​வாக்​கப்​பட்​டது. அற்ப அரசி​யல் காரணங்​களுக்​காக திட்​டத்​தையே கைவிடு​கிறேன் என்று சொன்​னால், அது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்​படுத்​தும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு மாற்று இடம் வேண்​டி, இது​வரை எந்த கோரிக்​கை​யும் மத்​திய அரசிடம் வைக்​காமல், எந்த இடத்தை தேர்வு செய்​யப் போகிறோம் என்ற தெளி​வும் இல்​லாமல், எதற்​காக இந்த அவசர முடிவு? தவெக அரசுக்கு பரந்​தூரில் விமான நிலை​யம் அமைவது பிரச்​சினையா அல்​லது தமிழகத்​துக்கு ஓர் புதிய விமான நிலை​யம் கிடைப்​ப​தில் பிரச்​சினை​யா?

வி த லீடர்ஸ் நிறு​வனர் அண்​ணா​மலை: பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை கைவிட முடிவு செய்​துள்​ள​தாக​வும், இரண்​டாவது விமான நிலை​யத்​துக்​காக வேறு சில இடங்​கள் பரிசீலனை​யில் இருப்​ப​தாக​வும் முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

ஆனால், புதிய இடம் எது என்​ப​தை​யும் முதல்​வர் அறி​வித்​திருந்​தால் சிறப்​பாக இருந்​திருக்​கும். ஏனெனில், இரண்​டாவது விமான நிலை​யத்​துக்​கான இடத்​தைத் தேர்வு செய்ய தாமதப்​படுத்​து​வ​தால், தமிழகத்​தின் வளர்ச்சி குறைந்​தது 10 ஆண்​டு​கள் தாம​திக்​கும் அபா​யம் உள்​ளது.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன்: தவெக தேர்​தல் வாக்​குறு​தி​யின் அடிப்​படை​யில் முதல்​வர் அறி​வித்​துள்​ளது வரவேற்​பிற்​குரியது.

புதிய விமான நிலை​யத்தை அதிக அளவில் சுற்​றுச்​சூழலுக்​கும் விவ​சாய நிலங்​களுக்​கும், குடி​யிருப்​பு​களுக்​கும் பாதிப்​பில்​லாமல் உரு​வாக்​கிட தகுந்த இடத்தை உடனடி​யாக அரசு தேர்வு செய்ய வேண்​டும்.

பாமக தலை​வர் ராம​தாஸ்: மீனம்​பாக்​கம் விமான நிலை​யம் 2031-ம் ஆண்​டில் அதன் முழு கொள்​ளளவை எட்டி விடும் என்​ப​தால், அதற்கு முன்​பாக புதிய விமான நிலை​யம் கட்டப்படுவது அவசி​யம்.

புதிய விமான நிலை​யம் கட்​டப்​பட​வில்லை என்​றால், சென்​னைக்கு புதிய விமானங்​கள் வராது. அவை பெங்​களூரூ, ஹைத​ரா​பாத் விமான நிலை​யங்​களுக்கு சென்​றால், அது ஒட்​டுமொத்த தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கும் பின்​னடைவை ஏற்​படுத்தி விடும்.

தவாக தலை​வர் வேல்​முரு​கன்: ஏகனாபுரம் உள்​ளிட்ட 13 கிராம மக்​களின் நீண்ட நெடிய போராட்​டம் வெற்றி பெற்​றிருக்​கிறது.

விமான நிலை​யம் அமைப்​ப​தற்​காக கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​கள், இனி வேறு எந்​தத் திட்​டத்​துக்​காக​வும் பயன்​படுத்​தப்பட கூடாது.

அந்த நிலங்​கள் அவற்​றின் உரிமை​யாளர்​களான விவ​சா​யிகளிடமே திருப்பி ஒப்​படைக்​கப்பட வேண்​டும்.

கொமதேக தலை​வர் ஈஸ்​வரன்: அரசின் அறி​விப்பை பார்க்​கும் பொழுது இரண்​டாவது விமான நிலை​யம் சென்​னைக்கு கொண்டு வரும் திட்​டமே இந்த அரசுக்கு அறவே இல்லை என்று தோன்​றுகிறது.

பரந்​தூர் விமான நிலை​யத்தை தடுத்​திருப்​பது தமிழக எல்​லைப் பகு​தி​யில் ஆந்​திர அரசு திட்​ட​மிடு​கின்ற விமான நிலைய கோரிக்​கைக்கு வலு சேர்க்​கும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT