தமிழகம்

மாநகரப் போக்குவரத்து கழகத்தில் வெளிமுகமை மூலம் நடத்துநர்களை நியமிக்க அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்​தில் வெளி​முகமை மூலம் நடத்​துநர்​கள் நியமிப்​ப​தற்கு அரசி​யல் தலை​வர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர்.

மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: திமுக அரசு, மாநகர போக்​கு​வரத்துக் கழகத்தில் காலிப்​பணி​யிடங்​களைப் நிரப்​பாமல், ஒப்​பந்​த பணி​யாளர்​களை ‘சால்​வாட்’ என்ற நிறு​வனம் மூலம் நியமனம் செய்​தது.

தவெக அரசு தற்​போது எஸ்​.எஸ். என்​டர்​பிரைசஸ் என்ற உத்​தரபிரதேச நிறு​வனம் மூலம் நடத்​துநர்​களை நியமிக்க முடிவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் வேலை​வாய்ப்​புக்​காக காத்​திருக்​கும்​போது, அவர்​களுக்கு வாய்ப்பை மறுக்​கும் வகை​யில் உ.பி. நிறு​வனத்​துக்கு ஒப்​பந்த முறை​யில் நடத்​துநர்​களை நியமனம் செய்ய ஆணை வழங்​கி​யிருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

இதனால் இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு பாதிக்​கப்​படும், இட ஒதுக்​கீடு அடிப்​படை​யில் பணி நியமனம் கைவிடப்​பட்டு சமூக நீதி​யும் பாதிக்​கப்​படும். எனவே உ.பி. நிறு​வனத்​துக்கு வழங்​கி​யுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்​டும்.

இது​போல் சிந்​தூரி மேனேஜ்மென்ட் சொல்​யூசன்ஸ் என்ற நிறு​வனத்​துக்கு நிர்​வாகப் பணி​யாளர்​கள் 250 பேரை ஒப்​பந்த அடிப்​படை​யில் நியமிக்க ஆணை வழங்​கி​யிருப்​ப​தை​ ரத்து செய்ய வேண்​டும். போக்​கு​வரத்​துத் துறை​யில் உள்ள காலிப் பணி​யிடங்​களை உடனடி​யாக நிரந்தர அடிப்​படை​யில் நிரப்ப வேண்​டும்.

தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன்: அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் நடத்​துநர், ஓட்​டுநர் போன்ற அடிப்​படைப் பணி​களை ஒப்​பந்த நிறு​வனங்​களிடம் ஒப்​படைப்​பது எதிர்​காலத்​தில் பொதுப் போக்​கு​வரத்​தையே தனி​யார் மயமாக்​கு​வதற்​கான பாதையைத் திறக்​கும் அபாயகர​மான நடவடிக்கை ஆகும்.

ஏற்​கெனவே போக்​கு​வரத்து ஊழியர்​கள் பணிச்​சுமை உள்​ளிட்ட பிரச்​சினை​களால் பாதிக்​கப்​பட்டு வரும் நிலை​யில், அவர்​களின் கோரிக்​கைகளுக்கு தீர்வு காணா​மல் ஒப்​பந்த முறையை விரிவுபடுத்​து​வது தொழிலா​ளர் நலனுக்கு எதி​ரானது. தொழிற்​சங்​கங்​களின் எதிர்ப்பை பொருட்​படுத்​தாமல் இந்த நடவடிக்​கையை தொடர்​வதை தமிழக வாழ்​வுரிமைக் கட்சி வன்​மை​யாக கண்​டிக்​கிறது.

அமமுக பொதுச் செய​லா​ளர் டி.டி.​வி.​தினகரன்: தேர்​தலுக்கு முன் தனி​யார்​ம​யத்​துக்கு எதி​ராக குரல் எழுப்​பிய தவெக, ஆட்​சிக்கு வந்​தவுடன், அதே தனி​யார்​மய​மாக்​கும் முறையை பின்​பற்​று​வது​தான் முதல்​வர் விஜய் சொன்ன மாற்​ற​மா? ஆட்​சிக்கு வந்து 100 நாட்​கள் கடந்​துள்ள நிலை​யில், போக்​கு​வரத்​துக் கழகங்​களில் நில​வும் ஆயிரக்​கணக்​கான காலிப் பணி​யிடங்​களை நிரப்ப தவெக அரசு துளியள​வும் நடவடிக்கை எடுக்​காதது, வேலைக்​காக காத்​திருக்​கும் தமிழக இளைஞர்​களுக்​கு இழைக்​கும்​ மிகப்​பெரிய துரோகம்​.

SCROLL FOR NEXT