நீட் முறைகேடு தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் திரளாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் எதிரொலி: மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு

தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்களுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வு முறை​கேடு விவ​காரத்தை கண்​டித்து நாடு முழு​வதும் மாணவர் அமைப்​பு​கள் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் போராட்​டங்​களை தீவிரப்​படுத்தி வரும் நிலை​யில், சென்னை மெரினா கடற்​கரை​யில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​துக்​குப் பொறுப்​பேற்று மத்​திய கல்விஅமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி டெல்லி ஜந்​தர் மந்தரில் தொடர் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த போராட்​டங்​களுக்கு பல்​வேறு எதிர்க்​கட்​சிகள், மாணவர் அமைப்​பு​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ளன. சமீபத்​தில் நடை​பெற்ற பேரணி​யின்​போது வன்​முறை ஏற்​பட்​டதைத் தொடர்ந்​து, பல மாநிலங்​களில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தி​லும் மாணவர் மற்​றும் இளைஞர் அமைப்​பு​கள் போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்​து​வரும் நிலை​யில், சமூக வலை​தளங்​கள் மூலம் கூட்​டத்தை திரட்டி சென்னை மெரினா கடற்​கரை​யில் போராட்​டம் நடத்​தப்​படலாம் என்ற தகவல் போலீ​ஸாருக்கு கிடைத்​தது.

இதையடுத்து நேற்று மெரினா மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டது. 2 காவல் துணை ஆணை​யர்​கள் தலை​மை​யில் சுமார் 300 போலீ​ஸார் மெரினா கடற்​கரை​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர். காம​ராஜர் சாலை, கடற்​கரைக்​குள் செல்​லும் நுழைவுவாயில்​கள் மற்​றும் முக்​கியசந்​திப்​பு​களில் போலீ​ஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தினர்.

நேற்று காலை முதலே மெரினா கடற்கரைப் பகுதிக்குச் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. யாரையும் போலீஸார் கடற்கரைப் பகுதிக்கு அனுமதிக்கவில்லை. மாலை நேரத்தில் பொழுதுபோக்க சுற்றுலா பயணிகள், வெளியூர் மக்கள் அதிக அளவில் வந்ததால், தீவிர சோதனைக்குப் பிறகு கடற்கரைப் பகுதிக்குச் செல்ல அவர்களை போலீஸார் அனுமதித்தனர்.

மெரினா கடற்​கரைக்கு வரும் பொதுமக்​கள், சுற்​றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்​டிகள் அனை​வரும் தீவிரசோதனைக்கு பிறகே அனு​ம​திக்​கப்​பட்​டனர். சந்​தேகத்​துக்​கிட​மான நபர்​களிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

போராட்​டக்​காரர்​கள் கூட்​ட​மாக மெரி​னா​ கடற்கரைப் பகுதிக்​குள் நுழைவதைத் தடுக்​கவே இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக போலீஸ் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதற்​கிடையே, மாநில சைபர் க்ரைம் போலீ​ஸாரும் வாட்​ஸ்​-அப், முகநூல், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களை தீவிர​மாகக் கண்​காணித்து வரு​கின்​றனர். சமூக வலை​தளங்​கள் மூலம் மாணவர்​கள் மற்​றும் இளைஞர்​களை ஒன்​றிணைத்து திடீர் போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுக்​கும் முயற்​சிகள் நடைபெறுகிறதா என்​பதை தீவிரமாக கண்​காணித்​து, தேவை​யான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதனால், மெரினா கடற்​கரைப் பகு​தி​யில் நேற்று முழு​வதும் பரபரப்​பான சூழல் நில​வியது. பொது​மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​ய​வும், சட்​டம்​ - ஒழுங்கு பா​திக்​கப்​ப​டா​மல் இருக்​க​வும் போலீ​ஸார்​ தொடர்ந்து தீவிர கண்​காணிப்​பில்​ ஈடு​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT